தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

மே 10-ல் தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. சைக்கிள் பேரணி - ஜெ. அறிவிப்பு

சென்னை:

மத்திய மாநில அரசுகளை கண்டித்து 10ம் தேதி அதிமுக சார்பில் சைக்கிள் பேரணி நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதாஅறிவித்துள்ளார்.

இதுகுறித்து செவ்வாய் கிழமை சென்னையில் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை:

மத்தியில் வாஜ்பாய் தலைமையிலான பாஜக கூட்டணி அரசும், மாநிலத்தில் கருணாநிதி தலைமையிலான திமுக அரசும் செய்து வரும் மக்கள் விரோதசெயல்களை கண்டித்து 10ம் தேதி புதன் கிழமை காலை 10 மணிக்கு கண்டன சைக்கிள் பேரணி நடைபெறும்.

தமிழகம் முழுவதும் மாநகர பகுதிகளிலும், ஒன்றிய, நகரங்களிலும் இப்பேரணி நடைபெறும். மத்திய அரசும், மாநில அரசும் ரேஷன் அரிசி, மண்ணெண்ணெய்,சமையல் எரிவாயு, உரம் ஆகியவற்றிற்கான மானியங்களைக் குறைத்து விலைகளை உயர்த்தியுள்ளது.

இதனால் ஏழை எளிய மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதை கைவிட வேண்டும் என்று கண்டனக்குரல் எழுப்பியும், பிரதமர் வாஜ்பாய் அதற்கு செவி சாய்க்காமல் அலட்சியமாக இருக்கிறார். இந்த விலை உயர்வை தமிழக முதல்வர் கருணாநிதிஆதரிப்பதோடு, மத்திய அரசின் மக்கள் விரோத செயல்களுக்கு துணையாகவும் இருக்கிறார்.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலை நாட்டகருணாநிதி தவறினார். 69 சதவீத இட ஒதுக்கீடு, பெண்களுக்கான 33 இட ஒதுக்கீடு,அரசு சிமன்ட் ஆலை தனியாருக்கு விற்க முயற்சி போன்ற பிரச்னைகளை கண்டித்தும்இப்பேரணி நடைபெறுகிறது என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+