தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil
அனைவருக்கும் அடையாள அட்டை: மார்க்சிஸ்ட்கட்சி வலியுறுத்தல்

திருச்சி:

""நடைபெற உள்ள சட்டசபை தேர்தலுக்குள் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கினால் தான் தேர்தல்நியாயமாக நடக்கும், என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் நல்லகண்ணு தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:

வரும் சட்டசபை தேர்தலுக்குள் வாக்காளர் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்க வேண்டும். அவ்வாறு வழங்கினால் தான் தேர்தல்நியாயமாகவும், நேர்மையாகவும் நடக்கும்.

பா.ஜ.க.,தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசை எதிர்த்து, மாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்யப்படும். இதற்காக இம் மாதம் 26ம்தேதி முதல் ஜூன் மாதம் 5ம் தேதி வரை பேரணி நடத்தப்படும் சென்னையிலும் இந்தப் பேரணி நடத்தப்படும்.

கடலில் மீன் பிடிக்கச் செல்லும் இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்படுவது பற்றி கூட்டத்தில் கடும் கண்டனம்தெரிவிக்கப்பட்டது.

இந்த விஷயத்தில் மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு வலியுறுத்தப்பட்டது. மாநிலத்தில் பயிர்களுக்குகடன்களுக்கான முதல் மற்றும் வட்டியை தள்ளுபடி செய்யவேண்டும்.

தமிழகத்தில் வரும் சட்டசபை தேர்தலுக்குள் மூன்றவது அணி அமையும் என்று சொல்ல முடியாது.

ஆனால், "மெகா முன்னணி அமையும் என்று மூப்பனார் சொல்லியிருக்கிறார். ஆனால், எங்களது முக்கிய நோக்கமே தி.மு.க.வை ஆட்சிக்கு வராமல்தடுக்க வேண்டும் என்பது தான்.

இவ்வாறு நல்லகண்ணு தெரிவித்தார்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+