செயலை விட அதன் பயனை நேசித்தால்!
செயலின் பயனில் ஆர்வம் செலுத்துவோரைவிட செயலில் ஆர்வம் காட்டுபவரைக் கீதை கொண்டாடுகிறது.
அதன் அவசியத்தையும் நியாயத்தையும் கொஞ்சம் கவனிப்போம்.
இரண்டு விவசாயிகள். ஒருவர் கர்மயோகி. மற்றொருவர் சராசரி. லாபத்தைக் குறிக்கோளாக உடைய சராசரிவிவசாயி, கரும்பு பயிரிடுவதை விட்டு கஞ்சா பயிரிட்டால் காசு கூட கிடைக்கும் என்றால், பயன் மீதுள்ள பற்றால்கஞ்சா பயிரிடுவார். கர்மயோகி அப்படிச் செய்வாரா? மாட்டார்.
உழைப்பே அவரது தவம்; உழவே அவரது ஜபம். வேள்வியில் இருந்து பிரிக்க முடியாத அக்கினி போல விவசாயபூமியில் இருந்து விலக்க முடியாதவர் அவர். உழைக்காமல் வரும் காசு அவருக்கு அருவருப்பு தரும். கரன்சிகாகிதங்களை மட்டுமே தின்னும் பணப்பசி அவருக்கு இல்லை.
அந்த விவசாய கர்ம யோகியின் சாம்ராஜ்யம் விசாலமானது. கலப்பையும் கையுமாக அவர் களத்தில் இறங்கும்போது காலைக்கதிரவன் அவரைக் கைகூப்பி வரவேற்கிறான்.
வளைந்து நிற்கும் தொடுவானம் அந்த விவசாயிக்கான வரவேற்பு வளையம்.
இவரது கம்பீரத்தில் கால் பங்காவது கஞ்சா பயிரிடுபவன் அனுபவித்தது உண்டா?
தேசத்ததின் தேவையை, நெல்லாலும் கோதுமையாலும் நிரப்பும் கடமை உணர்வு மிக்க விவசாயிகள் -கர்மயோகிகள். பாரத மாதாவின் தவப் புதல்வர்கள்.
செயலின் பயன் எப்படியும் நம்மை வந்தடையும். அதன் எதிர்பார்ப்பு செயலின் சுவையை இன்பத்தைகொன்றுவிடும்.
ஆசார்ய வினோபாபாவே எளிமையாக இதை விளக்குகிறார். ""குழந்தை விளையாடுகிறது. அது விளையாடுவதில்உள்ள இன்பத்திற்காகவே விளையாடுகிறது. இதனால் அதற்கு உடற்பயிற்சியின் பயன் தானே கிடைகிறது. ஆனால்அப்பயனிடத்தில் அதற்குக் கவனம் இருப்பதில்லை. அதற்கு இன்பம் முழுவதும் விளையாட்டிலேதான்.
மனிதர்களை மூன்று வகையாகப் பிரிக்கிறது கீதை. செயலைச் செய்துவிட்டு பயனைக் கருதாமல் இருப்பதுசத்வகுணம்.
பயனை விடுவது என்றால் செயலையும் விடுவோம்...செய்ய மாட்டோம் என்று சோம்பிக் கிடப்பது தமோ குணம்.
செயலையும் விட முடியாது. . பயனையும் விட முடியாது... நான் ஏன் பயனை விடவேண்டும் என்று போராடுவதுரஜோ குணம். பயனில் பற்றின்றி செயலில் கவனம் செலுத்திய காந்தியடிகள் போன்ற ஆன்ம ஞானிகள் கீதையின்புத்திரர்கள்.
உலக வரலாறு படித்தவர்கள் ஓர் உண்மை அறிவார்கள்.