கிரிக்கெட் மேட்ச் பிக்சிங்: சி.பி.ஐ. விசாரணைக்கு உதவத் தயார்- டால்மியா அறிவிப்பு
புது தில்லி:
இந்திய கிரிக்கெட் வீரர்கள் மீது கூறப்படும் கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரித்துவரும் மத்திய புலனாய்வுப் பிரிவுக்கு (சிபிஐ) உதவத் தயார் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர்ஜக்மோகன் டால்மியா தெரிவித்துள்ளார்.
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்கள் மற்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் அதிகாரிகள்சிலர் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சமீபகாலமாக பலவகையான குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன.இதையடுத்து இக் குற்றச்சாட்டுகள் குறித்து சிபிஐ விசாரித்து வருகிறது.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் மீது குற்றம் சாட்டிய இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமுன்னாள் தலைவர் ஐ.எஸ். பிந்த்ரா, சில நாட்களுக்கு முன் சிபிஐ அலுவலகத்துக்கு நேரில் சென்று 360 பக்கஅறிக்கையைச் சமர்ப்பித்தார். இது தொடர்பாக, அவரிடமும் சிபிஐ விசாரணை நடத்தவுள்ளது. கிரிக்கெட்சூதாட்டம் குறித்து கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து இதுவரை 4 பேரிடம் சிபிஐ விசாரித்துள்ளது.
இந் நிலையில், சிபிஐ விசாரணைக்கு முழு அளவில் உதவத் தயாராக இருப்பதாக ஜக்மோகன் டால்மியாஅறிவித்துள்ளார். குற்றச்சாட்டுகள் குறித்து என்னிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்த அவர்களுக்கு உரிமைஉள்ளது. அவர்கள் விரும்பினால், என்னிடம் விசாரணை நடத்தலாம்.
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் குரோனியே மீதான குற்றச்சாட்டுகள் குறித்து தென்ஆப்பிரிக்க விசாரணைக் கமிஷன் விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணையில் குறுக்கிட சர்வதேச கிரிக்கெட்கவுன்சில் விரும்பவில்லை. அதேபோல், இந்தியாவில் சிபிஐ நடத்தும் விசாரணையில் தலையிடவும்விரும்பவில்லை. இரு நாட்டு விசாரணை அமைப்புகளுக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் செய்தகிரிக்கெட் கவுன்சில் எப்போதும் தயாராக உள்ளது.
தென் ஆப்பிரிக்க விசாரணைக் கமிஷன் தனது இடைக்கால விசாரணை அறிக்கையை மே 31-ம் தேதி கவுன்சிலிடம்சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார் டால்மியா.
யு.என்.ஐ.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications