For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

லாலா அமர்நாத் மரணம்

By Staff
Google Oneindia Tamil News

கே: விசுவின் அரட்டை அரங்கத்தில் ஆண்களை விட பெண்களே - அதிலும்குறிப்பாக டீன் ஏஜ் பெண்களும், சிறுமிகளுமே மிகத் துடிப்போடு பேசுவதைகவனித்தீர்களா... இப்போது என்ன சொல்கிறீர்கள்...?

ப: அந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறவர்கள் ( ஆண், பெண் இரு சாரருமே) பேசுகிற பேச்சு, எனக்கு அதிர்ச்சியளிக்கிறது: என்னைகவலைக்குள்ளாக்குகிறது. அந்தப் பேச்சையெல்லாம் கேட்டுக் கொண்டு, நிகழ்ச்சியை அமைதியாக நடத்திச் செல்கிற விசுவின் பொறுமை, என்னைவியப்புக்குள்ளாக்குகிறது. பொறுமைக் கடல்தான்! அந்த இளைஞர்களில் பெரும்பாலானர்வர்களைப் பொறுத்தவரையில் - எதிர்காலத்தைப் பற்றியஅச்சத்தைத் தோற்றுவிப்பவர்கள் அவர்கள்.

கே: நம் விஞ்ஞானிகள் லஞ்ச ஊழலை கண்டுபிடிக்க, மருந்து ஏதாவது கண்டு பிடித்தால் - எப்படி இருக்கும்?

ப: அந்த மருந்தில் சேர வேண்டிய பொருட்கள், அந்த மருந்துகளின் பாட்டில்கள், அல்லது பாக்கெட்டுகள், போன்றவற்றைவாங்குவதிலும்,வினியோகம் செய்வதிலும் பெரும் ஊழல் நடக்கும்: மருந்தே கலப்படமாகி விடும்: ஊழலுக்கு புதியதோர் களம் பிறந்து தவிர வேறுபலன் இருக்காது.

கே: காஷ்மீரில் உள்ள தீவிரவாதக் குழுக்கள் மறு சிந்தனை செய்யத் துவங்கி இருக்கிறார்கள் என்று மத்திய மந்திரி பெர்னாண்டஸ் கூறியிருப்பது பற்றி...?

ப: பெர்னாண்டஸ் ஆதாரத்துடன் இப்படி பேசியிருக்கிறாரா அல்லது தனக்கு இயற்கையாகவே உள்ள தீவிரவாத பரிவு காரணமாக இப்படிகூறியிருக்கிறாரா - என்பது போகப் போகத்தான் தெரிய வேண்டும்.

கே: நீண்ட ஆயுளுக்கான (ஜெனோம்) முயற்சிகள் வெற்றி பெற்றால், அரசியல்வாதிகள் என்ன நினைப்பார்கள்?

கே:அரசியல்வாதிகள் நினைப்பது இருக்கட்டும்.அவர்களுடைய வாரிசுகள் மனம் ஒடிந்து போய் விடுவார்கள். நமக்கு சான்ஸே வராதுபோலிருக்கிறதே என்று 600 வயது தகப்பனாரைப் பார்த்து வயிறெரிந்து வெதும்புவதைத் தவிர, அவர்களுககு வேறு வழி இருக்காதே!

கே: ஊழல் குற்றச்சாட்டுகளில் ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளும் கைதாகி சிறை செல்வது வேதனை அளிக்கிறது என்று சபாநாயகர் பி..டி.ஆர். பழனிவேல்ராஜன் கூறியுள்ளது பற்றி...?

ப: இதற்கே இப்படி வேதனைப்பட்டால், பிறகு என்ன ஆவது? ஒரு நீதிபதி இப்படி சிக்குகிற நாள் வருகிறபோதுே, பழனிவேல் ராஜன் என்னசெய்வாரோ?

கே: சோனியா காந்தி தலைமைப் பதவி ஏற்றதால், காங்கிரஸ் அடைந்த நன்மைகள் என்ன? தீமைகள் என்ன?

ப: உடையாமல் இருந்த்து நன்மை: உருப்படாமல் இருப்பது தீமை.

கே: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபுக்கு விதிக்கப்பட்ட தண்டனை பற்றி...?

ப: இது அந்நாட்டு சட்டத்தின் தீர்ப்பு அல்லா: அரசு திட்டத்தின் தீர்ப்பு.

கே:அதிகமாக சிந்தனை செய்பவர்களுக்கு, தலையில் முடி இருக்காதாமே உண்மையா?

கே:அதிகமாகப் பேசுபவர்களுக்கு தாடி வளராது என்றால், இதுவும் உண்மையாகத்தான் இருக்கும்.

கே:தி.மு.க., அ.தி.மு.க. - ஆகிய இரு கூட்டணிகளிலும் பா.ம.க.வுக்கு ஒரே நிலைதான். கருணாநிதியும், ஜெயலலிதாவும் என்னிடம் பழகிய விதம்,கொடுத்த மரியாதை இரண்டும் ஒரே மாதிரிதான். வித்தியாசம் இல்லை என்று டாக்டர் ராமதாஸ் கூறுவது பற்றி...?

ப: கேட்கிற அளவு சீட் கொடுக்கப் போகீறீர்களா?அல்லது அ.தி.மு.க. அணிக்கு போகட்டுமா? என்று கருணாநிதியிடம் நேரிடையாக கேட்கமனமில்லாத காரணத்தால், ராமதாஸ் இப்படி பேசியிருக்கிறார்.பண்பாளர்!

கே: கங்கை,யமுனா, காவிரி - என்று நமது நாட்டில் ஓடும் நதிகளுக்கெல்லாம், பெரும்பாலும் பெண்ணின் பெயரையே வைத்திருப்பது - பெண்மையின்சிறப்பைத்தானே உயர்த்துகிறது?

ப: நதி எந்தப் பாதையில் திரும்பும் , எப்போது பெகுக்கெடுத்து ஓடும். எப்போது வறண்டு விடும் - என்பதெல்லாம் நிச்சயமாகத் தெரியாத விஷயங்கள்:அந்த சிறப்பை பெண்களும் பெற்றிருக்கிறார்கள் - என்று நீங்கள் கூறுகிறீர்கள். உங்களுடைய பெண் விரோதப் போக்கு என்னை வியப்பில்ஆழ்த்துகிறது.

கே: தமிழகத்தில் உள்ள ஆறு கோடி தமிழர்களுக்கும், மற்றும் உலகத் தமிழர்களுக்கும் முகவரி கொடுத்தவர் பிரபாகரன்தான் என்கிறாரேராமதாஸ்...?

ப:பெரியார், அண்ணா என்றெல்லாம் பேசி வந்தது வெறும் டூப் என்று ஒப்புக் கொள்வது அவருடைய இஷ்டம் அதில் குறுக்கிட நாம் யார்?

கே: கிரிக்கெட் வீரர்கள் நடித்த விளம்பரப் படங்கள், அடியோடு நிறுத்தப்பட்டு விட்டதே, இது சரியா?

ப: கிரிக்கெட் ஆட்டக்காரர்கள் கிட்டத்தட்ட ஸ்வாமி, பிரேமானந்தா மாதிரி ஆகிவிட்டார்கள். பிரேமானந்தா பெயரைப் போட்டு யாராவதுதனது உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்வார்களா?

கே: குஜராத் மாநிலம் பரோடாவில் உள்ள ஒரு கல்லூரியில், மாணவர்கள் சிலர் மாணவிகள் இன்ன உடைதான் அணிய வேண்டும் என்று வற்புறுத்தி, துணைவேந்தர் அறை முன்பாக நடனம் ஆடிய நிகழ்ச்சி பற்றி...?

ப: அவர்கள் செய்தது அநாகரிகம். ஆனால் அவர்களுடைய அணுகுமுறை கண்டனத்துக்குரியது என்பதால், அவர்களுடைய கோரிக்கையே அர்த்தமற்றதுஎன்று கூறிவிட முடியாது. இதில் எல்லாம் ஓர் ஒழுங்குமுறை கொண்டு வரப்படுவது நல்லதுதான்.

கே:ஆட்சியில் பங்கு கேட்கும் த.மா.கா. எப்படி காமராஜ் ஆட்சி அமைக்க முடியும்? என்று மு.க. ஸ்டாலின் பேசி இருக்கிறாரே?

ப: காமராஜ் ஆட்சியை உடனடியாக அமைத்தால்தான் உண்டா? ஏதோ ஒரு ஆட்சியில் பங்கு பெற்று - கா ஆட்சி: அதற்குப் பிறகு ம ஆட்சி என்றுபோனால் கடைசியில் காமராஜ் ஆட்சி அமைந்த திருப்தி வந்துவிடுமே!

கே; பெண்களை மதிக்காத நாடும், வீடும் நிச்சயம் உருப்படாது என்று சொல்கிறார்களே! இதில் உங்களுக்கு உடன்பாடு உண்டா?

ப: உண்டு. பெண்களை மதிக்க வேண்டும் என்பதில் முழுமையாக உடன்பாடு உண்டு.

கே:கவர்னர் பதவி - தமிழக காங்கிரஸ் தலைவர் பதவி - அ.தி.மு.க. அவைத் தலைவர் பதவி - இவை மூன்றில் ஏதேனும் ஒரு பதவியை நீங்கள்பெற்றே தீர வேண்டும் என்ற நிலை வந்தால், எந்தப் பதவியைத் தேர்ந்தெடுப்பீர்கள்?

ப:அ.தி.மு.க. அவைத் தலைவர் பதவி - சுத்தமாக வேலை இருக்காது: வந்தேனா போனேனா என்று கூட யாரும் கவலைப்பட மாட்டார்கள். நிம்மதி.

கே: கார்கில் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது பற்றி ...?

ப: உம். சரி. அடுத்த கேள்விக்கு போவோம்.

கே: காஷ்மீரில் ஹிஜ்புல் முஜாஹுதின் என்ற தீவிரவாத அமைப்பு, போர் நிறுத்தம் அறிவிப்பு செய்துள்ளது பற்றி...?

ப: பார்ப்போம். இது தாக்குப் பிடிக்கிறதா என்று பார்த்த பிறகுதான் அபிப்ராயம் சொல்ல முடியும்.

கே: கூட்டணியில் இருந்து கொண்டே குழப்பம் ஏற்படுத்தும் வேற்று கட்சி மந்திரிகளை வெளியேற்றாமல், ராம்ஜெத் மலானியை வெளியேற்றியதற்குஎன்ன காரணம்?

ப: ராம்ஜெத் மலானியிடம், எம்.பி.க்கள் இல்லை. நான்கு எம்.பிக்கள் அவர் வசம் இருந்திருந்தால், சமாதானப் பேச்சு நடந்திருக்கும்.

கே: ஜாதி சங்கங்களைத் தடை செய், சட்டத்தில் இடம் உள்ளதா என்பது பற்றி அரசு பரிசீலிக்கும் என்று முதல்வர் கலைஞர் கூறியிருப்பது பற்றி...?

ப: ஜாதிச் சங்கங்களைத் தடை செய்ய முடியாது. தேர்தலில் ஜாதிப் பிரச்சாரத்தின் மூலம் ஓட்டு சேகரித்தால், அது சட்ட விரோதமானது. இதை வைத்துநடவடிக்கை எடுக்கலாம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X