காஷ்மீர் பிரச்சினையில் மத்திய அரசு குழம்பியுள்ளது
டெல்லி:
காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக மத்தியஅரசு குழம்பியுள்ளது. இப்பிரச்சினை குறித்துபாகிஸ்தானுடன் பேச்சு நடத்த மத்திய அரசு முன்வர வேண்டும் என்று மூத்த காங்கிரஸ்தலைவர் பிரனாப் முகர்ஜி கூறியுள்ளார்.
பாகிஸ்தான் தீவிரவாதத்தை நிறுத்தினால்தான் பேச்சு நடத்த முடியும் என்று இந்தியாகூறுவது சரிவராது. எந்த நாடும் தான் தீவிரவாதத்தில் ஈடுபடுவதை ஒத்துக் கொள்ளாதுஎன்றும் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
இந்திய அப்ராட் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில், முதலில் இந்தியாபேச்சுவார்த்தைக்கு சம்மதிக்க வேண்டும். அதன் பிறகு தீவிரவாத செயல்களை நிறுத்தவேண்டும் என்று பாகிஸ்தானுக்கு அறிவுறுத்த வேண்டும். அப்படி இல்லாவிட்டால்பேச்சுவார்த்தை தொடராது என்று எச்சரிக்க வேண்டும்.
ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாத அமைப்புடன் மத்திய அரசு அவசரப்பட்டுபேச்சுவார்த்தைக்கு ஒத்துக் கொண்டது தவறு. மிகுந்த முன்னெச்சரிக்கையுடன்பேச்சுவார்த்தை விவகாரத்தை மத்திய அரசு கையாண்டிருக்க வேண்டும்.
தேசிய ஜனநாயக முன்னணிக் கூட்டணியின் காஷ்மீர் கொள்கை மிகவும் குழப்பமானதாகஉள்ளது. முரண்பாடாக உள்ளது. பாகிஸ்தான் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தும் எண்ணம்இப்போதைய அரசுக்கு இருப்பதாகத் தெரியவில்லை என்றார் அவர்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications