கோவையில் அதிகரிக்கும் சாலை விபத்துக்கள்
கோவை:
நோயால் இறப்போரின் எண்ணிக்கையை விட, விபத்தில் இறப்போரி ன் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனைத் தடுக்க அரசு சட்டங்களில்போதுமான திருத்தம் செய்யப்பட வேண்டும் என கோவையில் எம்.ஜி.ஆர் பல்கலைக் கழகத் துணை வேந்தர் ஆனந்தகண்ணன் பேசினார்.
கோவை மெடிக்கல் சென்டர் நடத்திய கருத்தரங்கில் கலந்து கொண்டு எம்.ஜி.ஆர் பல்கலைக் கழக துணைவேந்தர் ஆனந்தகண்ணன் பேசியதாவது:
சாலை விபத்துகள் மனித உயிர்களைப் பறிக்கக் கூடியதாக மாறி வருகிறது. இதே நிலை நீடித்தால், வரும் 2020ம் ஆண்டிற்குள் நோயால் இறப்போரின்எண்ணிக்கையைக் காட்டிலும், விபத்தில் இறப்போரின் எண்ணிக்கை அதிகரித்து விடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில், கடந்த ஆண்டு 48 ஆயிரம் விபத்துகள் ஏற்பட்டுள்ளன. இதில், 6 ஆயிரத்து 528 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 1993ம் ஆண்டு, 34 ஆயிரம்விபத்துகளில் 8 ஆயிரத்து 700 பேர் பலியாகியுள்ளனர்.
விபத்தின் எண்ணிக்கை அதிகரித்த போதிலும், உயிரிழப்பு குறைந்துள்ளது. தகவல் தொடர்பின் வளர்ச்சியாலும், நவீன மருத்துவத் தொழில்நுட்பம்காரணமாகவும் பெருமளவு உயிரிழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது. இன்னும் மருத்துவ தொழில்நுட்பத்தில் வளர்ச்சி பெற வேண்டும். பல ஆராய்ச்சிகள் இந்ததுறையில் மேற் கொள்ளப்பட்டால் தான் விபத்துகளில் இறப்போரின் எண்ணிக்கையை கணிசமாக தவிர்க்க இயலும்.
சென்னைக்கு அடுத்தபடியாக கோவையில் தான் சாலை விபத்துகள் அதிகரித்து வருகிறது. கடந்த 6 மாத காலத்தில், 162 பேர் இறந்துள்ளனர். எனவேவிபத்துக்களைத் தவிர்க்க அரசு புதிய கொள்கை ஒன்றை ஏற்படுத்த வேண்டும்.
இந்தக் கொள்கை மூலம் மக்களின் உயிர்களைக் காக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சாலை விபத்தில் காயமடைந்தவர்களை அந்தந்தஇடங்களில் உதவி செய்ய தன்னார்வ தொண்டு நிறுனங்கள் முன் வர வேண்டும். மேலும், இவர்களுக்கு உதவ மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும்.
விபத்துகள் பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்துகின்றன. தனி மனிதன் வாழ்வில் மருத்துவ செலவு, உற்பத்தி இழப்பு, இன்சூரன்ஸ் கம்பெனிகளுக்குபண இழப்பு, நஷ்ட ஈடு ஆகியவை ஏற்படுகின்றன. எனவே, விபத்துக்களை தவிர்க்க தேவையான நடவடிக்கைகள் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும்என்றார். கருத்தரங்கில் கோவை மெடிக்கல் சென்டர் டாக்டர் திருநாவுக்கரசு கலந்து கொண்டு நன்றி கூறினார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications