பொருளாதார சீர்திருத்தம் குறித்து கோவையில் கருத்தரங்கம்
கோவை:
கோவையில் பொருளாதார தாரளமயமாக்கல் குறித்த இரண்டு நாள் கருத்தரங்கு நடக்கிறது.
அடுத்த நான்கு ஆண்டுகளில் சர்வதேசப் பொருளாதாரத்தில் பெரும் மாற்றம் ஏற்படப்போகிறது. இந்தமாற்றத்திற்கு சர்வதேச வர்த்தக ஒப்பந்தம் (டபிள்யூ.டி.ஓ) காரணமாக அமையும். இதனால் ஏற்படும் விளைவுகள்என்ன என்பது பற்றி விளக்க கோவையில் ஒரு மாநாடு நடைபெறவுள்ளது.
இதற்கு தொழில்சார்ந்த இன்ஜினியர்களின் கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.
செப்டம்பர் 29 மற்றும் 30ம் தேதி நடக்கும் இரண்டு நாள் கருத்தரங்கில், 130 பொருளாதார நிபுணர்கள் கலந்துகொள்கின்றனர்.
30 கருத்துரைகள் இடம் பெறுகின்றன. விவசாயம், போக்குவரத்து, சுரங்கத் தொழில், எரிபொருள்,எலெக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிக்கல்ஸ், கல்வி, ராசயணத் துறை, சுகாதாரம், டெக்ஸ்டைல், ரப்பர், தேயிலை, மருத்துவம்உட்பட பல்வேறு துறைகளில் சர்தேச ஒப்பந்தத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து இதில் விவாதிக்கப்படுகிறது.
ஞகோவை ஓட்டல் ரெசிடென்சியில் இந்த கருத்தரங்கு நடக்கிறது.












Click it and Unblock the Notifications