ஜெ. விவகாரம் ஒரு பழி வாங்கும் அரசியல் ..கி.வீரமணி
சென்னை:
ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்டுள்ள சிறைத் தண்டனையால் தமிழக அரசியலில் எந்தவித மாற்றமும் ஏற்படப் போவதில்லை என்று திராவிடர்கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்தார்.
சென்னையில் செவ்வாய் கிழமை அவர் அளித்த பேட்டி:
நீதிமன்றத் தீர்ப்பால் எந்த மாற்றமும் ஏற்படாது. மக்கள் மன்றத்தின் மூலம்தான் மாற்றம் வரும். பழிவாங்கும் அரசியலுக்கு எதிராகதமிழக மக்கள் தீவிரமாக இருப்பார்கள். நெருக்கடி நிலைக்கு பின்னர் மக்கள் அமைதியாக தீர்ப்பளித்து இந்திரா காந்தியை தூக்கி எறிந்தனர்.அதேபோல் தமிழக மக்களும் தீர்ப்பு அளிப்பார்கள்.
ஜனதா கட்சித் தலைவர் சாமி தி.க. மீது அவதூறான புகார்களை கூறி வருகிறார். மதச்சார்பற்ற கூட்டணியில் எல்லா எதிர்க் கட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இதில் இடம் கிடைக்கவில்லையே என்ற எரிச்சலில் தான் அவர் இப்படி பேசுகிறார். அதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லைஎன்றாலும் நாங்கள் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என்றார் வீரமணி.












Click it and Unblock the Notifications