நினைத்தேன் எழுதுகிறேன்

Subscribe to Oneindia Tamil

கேள்வி - பதில்

கே: த.மா.கா.வின் எதிர்காலம் என்ன?

ப: ஜெயலலிதாவின் எதிர்காலம் என்ன என்று கேட்க நினைத்தால், அதை நேரிடையாகக் கேட்க வேண்டியதுதானே?

கே: எங்களைக் கேட்காமல் கேஸ், பெட்ரோல் விலைகளை உயர்த்துவதா - என்று கூட்டணிக் கட்சிகள் எல்லாம் கண்டனக் குரல்கொடுக்கும்போது, கருணாநிதி மட்டும் இன்னும் வாய் திறக்காமல் இருப்பது - இன்றைய சூழ்நிலையில் சரியா?

ப: இந்த மாதிரி விஷயங்களில் மத்திய அமைச்சர் மாறன் என்னை மாதிரி. இவை தவிர்க்க முடியாதவை என்பதை அவர் உண்ர்ந்திருக்கிறார். அவர்சொல்லித்தான் தி.மு.க. இதை எதிர்க்காமல் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். இது யூகம் ; செய்தி அல்ல

கே: த்ரிணாமுல் காங்கிரஸ் கட்சி, தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகினால், மத்திய அரசுக்கு ஆபத்து ஏற்படுமா?

ப: ஆபத்து ஏற்படாது. அவர் விலகினாலும் கூட ஆட்சி கவிழாமல் இருக்குமளவுக்கு மெஜாரிட்டி பலம் இருக்கிறது. ஆனால் சங்கடம் ஏற்படும். இனி என்ன ஆகுமோ ? என்ற நினைப்பைக் கிளறி விடும். இது ஆட்சியின் ஸ்திரத்தன்மைக்கு நல்லது அல்ல.

கே: தங்களுக்கு திடீரென தலையில் முடி முளைத்து விட்டால். என்ன செய்வீர்கள்?

ப: மொட்டையடித்துக் கொள்வேன் - திருப்பதிக்குப் போய்.

கே: உண்மையை விரைவில் மூப்பனார் தெரிந்து கொள்வார் என்று முதல்வர் கருணாநிதி எதைக் குறிப்பிடுகிறார்?

ப: அவருக்கு என்ன பயமோ? எனக்கென்ன தெரியும்?

கே: எம்.ஜி.ஆரை நான் கடவுள் ஸ்தானத்தில் வைத்து மதிக்கிறேன் என்று துரைமுருகன் கூறியுள்ளது பற்றி ...?

ப: என்ன செய்வது? கடவுள் மறுப்பு இயக்கத்தைச் சார்ந்தவர்களை தலைவர்களாக துரைமுருகன் ஏற்றதால், அவர் கடவுளை மறுக்க வேண்டியதாகிவிட்டதே!

கே: வாஜ்பாய் மருத்துவ சிகிச்சை செய்து கொண்டால், இடைக்காலப் பிரதமராக அத்வானி வர வாய்ப்பு இருக்கிறதா?

ப: அது ஒரு சாத்தியக்கூறு. நிர்பந்தம் அல்ல.

கே: நாட்டு நடப்பைப் பார்த்தால், மீண்டும் ஜெயலலிதாவே முதல்வராகி விடுவார் போலிருக்கிறதே?

பச இந்தத் தோற்றத்ததை ஏற்படுத்தியது கருணாநிதி அரசின் சாதனை.

கே: வாழ்வில் வெற்றி பெற ஏதாவது ஒரு மிக எளிய வழியைச் சொல்லுங்களேன்?

ப: பெற்றதை வெற்றி என நினைத்துக் கொண்டு விடுவதுதான் எளிதான வழி.

கே: கேரள பஞ்சாயத்துத் தேர்தலில் பி.ஜே.பி. கொஞ்சம் தளிர் விட்டிருக்கிறதே?

ப: ஆமாம் ; கொஞ்சம்.

கே; வீரப்பன் கடத்திச் சென்ற நாகப்பா தப்பி விட்டாரே?

ப: தப்பி வந்தாரோ, அல்லது தகவலுடன் வந்தாரோ... அது கிடக்கட்டும். உண்மை தப்பி வெளிவர மாட்டேன் என்கிறதே!

கே: டாக்டர் ராமதாஸ் தி.மு.க. அணியை விட்டு விலகுவாரா?

ப: எனக்கு அந்த சந்தேகம் பலமாக இருக்கிறது. இப்போதைய நிகழ்ச்சிகளினால் ஏற்பட்ட சந்தேகம் அல்ல இது. சில மாதங்களாகவே இதுபற்றிதுக்ளக் தெரிவித்துவருகிற சந்தேகம், இன்னமும் தீர்ந்தபாடில்லை.

கே: நெல்லையில், காமராஜூக்கு சிலை திறந்து வைத்து, அவருக்கு புகழாரம் சூட்டியுள்ள முதல்வரின் பெருந்தன்மை பற்றி ...?

ப: நல்ல பெருந்தன்மை. காமராஜ் சுற்றுப்பயணம் செய்யும் இடங்களில் ஏ.சி. அறை கேட்டார் ; அதை நான் கொடுத்தேன் ; அதனால் காமராஜ் என்னைஎதிர்த்துப் பேச மறுத்து, பொதுக் கூட்டத்திற்குப் போவதையே தவிர்ததார் ... என்றெல்லாம் முதல்வர் பேசியிருக்கிறார் ,

புகழுரையா இது? காமராஜ் மீது கழகத்தினருக்கு அன்று ஏற்பட்ட கோபம் இன்னும் தீரவில்லை என்பதைத்தான், முதல்வரின் பேச்சு சுட்டிக்காட்டுகிறது. காமராஜை முதல்வர் கேவலப்படுத்தியிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+