நினைத்தேன் எழுதுகிறேன்
கேள்வி - பதில்
கே: த.மா.கா.வின் எதிர்காலம் என்ன?
ப: ஜெயலலிதாவின் எதிர்காலம் என்ன என்று கேட்க நினைத்தால், அதை நேரிடையாகக் கேட்க வேண்டியதுதானே?
கே: எங்களைக் கேட்காமல் கேஸ், பெட்ரோல் விலைகளை உயர்த்துவதா - என்று கூட்டணிக் கட்சிகள் எல்லாம் கண்டனக் குரல்கொடுக்கும்போது, கருணாநிதி மட்டும் இன்னும் வாய் திறக்காமல் இருப்பது - இன்றைய சூழ்நிலையில் சரியா?
ப: இந்த மாதிரி விஷயங்களில் மத்திய அமைச்சர் மாறன் என்னை மாதிரி. இவை தவிர்க்க முடியாதவை என்பதை அவர் உண்ர்ந்திருக்கிறார். அவர்சொல்லித்தான் தி.மு.க. இதை எதிர்க்காமல் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். இது யூகம் ; செய்தி அல்ல
கே: த்ரிணாமுல் காங்கிரஸ் கட்சி, தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகினால், மத்திய அரசுக்கு ஆபத்து ஏற்படுமா?
ப: ஆபத்து ஏற்படாது. அவர் விலகினாலும் கூட ஆட்சி கவிழாமல் இருக்குமளவுக்கு மெஜாரிட்டி பலம் இருக்கிறது. ஆனால் சங்கடம் ஏற்படும். இனி என்ன ஆகுமோ ? என்ற நினைப்பைக் கிளறி விடும். இது ஆட்சியின் ஸ்திரத்தன்மைக்கு நல்லது அல்ல.
கே: தங்களுக்கு திடீரென தலையில் முடி முளைத்து விட்டால். என்ன செய்வீர்கள்?
ப: மொட்டையடித்துக் கொள்வேன் - திருப்பதிக்குப் போய்.
கே: உண்மையை விரைவில் மூப்பனார் தெரிந்து கொள்வார் என்று முதல்வர் கருணாநிதி எதைக் குறிப்பிடுகிறார்?
ப: அவருக்கு என்ன பயமோ? எனக்கென்ன தெரியும்?
கே: எம்.ஜி.ஆரை நான் கடவுள் ஸ்தானத்தில் வைத்து மதிக்கிறேன் என்று துரைமுருகன் கூறியுள்ளது பற்றி ...?
ப: என்ன செய்வது? கடவுள் மறுப்பு இயக்கத்தைச் சார்ந்தவர்களை தலைவர்களாக துரைமுருகன் ஏற்றதால், அவர் கடவுளை மறுக்க வேண்டியதாகிவிட்டதே!
கே: வாஜ்பாய் மருத்துவ சிகிச்சை செய்து கொண்டால், இடைக்காலப் பிரதமராக அத்வானி வர வாய்ப்பு இருக்கிறதா?
ப: அது ஒரு சாத்தியக்கூறு. நிர்பந்தம் அல்ல.
கே: நாட்டு நடப்பைப் பார்த்தால், மீண்டும் ஜெயலலிதாவே முதல்வராகி விடுவார் போலிருக்கிறதே?
பச இந்தத் தோற்றத்ததை ஏற்படுத்தியது கருணாநிதி அரசின் சாதனை.
கே: வாழ்வில் வெற்றி பெற ஏதாவது ஒரு மிக எளிய வழியைச் சொல்லுங்களேன்?
ப: பெற்றதை வெற்றி என நினைத்துக் கொண்டு விடுவதுதான் எளிதான வழி.
கே: கேரள பஞ்சாயத்துத் தேர்தலில் பி.ஜே.பி. கொஞ்சம் தளிர் விட்டிருக்கிறதே?
ப: ஆமாம் ; கொஞ்சம்.
கே; வீரப்பன் கடத்திச் சென்ற நாகப்பா தப்பி விட்டாரே?
ப: தப்பி வந்தாரோ, அல்லது தகவலுடன் வந்தாரோ... அது கிடக்கட்டும். உண்மை தப்பி வெளிவர மாட்டேன் என்கிறதே!
கே: டாக்டர் ராமதாஸ் தி.மு.க. அணியை விட்டு விலகுவாரா?
ப: எனக்கு அந்த சந்தேகம் பலமாக இருக்கிறது. இப்போதைய நிகழ்ச்சிகளினால் ஏற்பட்ட சந்தேகம் அல்ல இது. சில மாதங்களாகவே இதுபற்றிதுக்ளக் தெரிவித்துவருகிற சந்தேகம், இன்னமும் தீர்ந்தபாடில்லை.
கே: நெல்லையில், காமராஜூக்கு சிலை திறந்து வைத்து, அவருக்கு புகழாரம் சூட்டியுள்ள முதல்வரின் பெருந்தன்மை பற்றி ...?
ப: நல்ல பெருந்தன்மை. காமராஜ் சுற்றுப்பயணம் செய்யும் இடங்களில் ஏ.சி. அறை கேட்டார் ; அதை நான் கொடுத்தேன் ; அதனால் காமராஜ் என்னைஎதிர்த்துப் பேச மறுத்து, பொதுக் கூட்டத்திற்குப் போவதையே தவிர்ததார் ... என்றெல்லாம் முதல்வர் பேசியிருக்கிறார் ,
புகழுரையா இது? காமராஜ் மீது கழகத்தினருக்கு அன்று ஏற்பட்ட கோபம் இன்னும் தீரவில்லை என்பதைத்தான், முதல்வரின் பேச்சு சுட்டிக்காட்டுகிறது. காமராஜை முதல்வர் கேவலப்படுத்தியிருக்கிறார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications