அமர்ந்த நிலையில் இறந்த யானை
பாலக்காடு:
கம்பீரமான 55 வயது யானை ஒன்று உட்கார்ந்த நிலையிலேயே உயிர் விட்டது.
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ளது செருப்பளச்சேரி. இந்த ஊரைச் சேர்ந்தவர் கிருஷ்ணமுத்தான். இவர் 55 வயதான கணேசன் என்றயானையை வளர்த்து வந்தார். இதை இரண்டு பாகன்கள் பராமரித்து வந்தனர்.
இந்நிலையில் இந்த யானைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் தென்னந்தோப்பில் சங்கிலியால் கட்டப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட பின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த யானை அவிழ்த்து விடப்பட்டது.
சில அடி தூரம் நடந்த யானை உட்கார்ந்து விட்டது. பாகன்கள் அந்த யானை நடக்க முடியாமல் உட்கார்ந்து விட்டது என அருகில் சென்று பார்த்த போதுஅது இறந்திருந்தது தெரிய வந்தது.
யானை உட்கார்ந்து வணங்கிய நிலையில் இறந்திருந்தது கண்டு ஆச்சரியமடைந்த அந்த ஊர் மக்கள் யானைக்கு மாலையிட்டு வணங்கினர். பிரேதபரிசோதனையில் யானை மாரடைப்பால் இறந்தது என தெரிய வந்ததது.












Click it and Unblock the Notifications