திமிங்கலத்தைக் காக்க வந்தது கடற்படை
நாகப்பட்டனம்:
நாகப்பட்டனம் மாவட்டம் பச்சைக்காடு பகுதியில் கடலோர புதைகுழியில் மூழ்கிய 40 அடி நீளமுள்ள திமிங்கலத்தைத் தேடும் முயற்சியில் கடற்படையில்தீவிரமாக இறங்கியுள்ளனர்.
வேதாரண்யத்திலிருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது பச்சைக்காடு. இங்குள்ள கடலில் கடந்த அக்டோபர் 5 ம் தேதி பெண் திமிங்கலம் கரைஒதுங்கியது. ஆழம் குறைந்த பகுதிக்கு அது வந்ததால் அங்குள்ள புதைகுழியில் அது சிக்கிக் கொண்டது.
கோடியக்கரை பகுதியிலுள்ள கடலில் மத்தி என்ற ஒருவகை மீன்கள் அதிக அளவில் காணப்படும். இந்த மீன் மீது ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்ததிமிங்கலங்களுக்கு கொள்ளைப் பிரியம்.
இந்த மீன்களைப் பிடிப்பதற்காக பாக் ஜலசந்தி கடல் பகுதிக்குள் நுழையும் ஆஸ்திரேலியத் திமிங்கலங்கள், அந்த மீன்கள் அதிகம் வசிக்கும் பகுதிக்குள்வந்ததும், தங்களது வால் பகுதியால் சுழற்றி அடித்து, சிக்கும் மீன்களை அப்படியே விழுங்கி விடும்.
இந்த மீன்கள் மீது கொண்ட மோகத்தால், இப்பகுதியிலுள்ள கடலுக்கு வந்த 2 திமிங்கலங்கள் ஆழம் குறைவு காரணமாக புதைகுழியில் சிக்கிக் கொண்டன.இவற்றில் ஆண் திமிங்கலம் கடந்த 8 ம் தேதி இறந்தது. அதை நாகை மாவட்ட நிர்வாகம் இயந்திரம் மூலம் அகற்றி அடக்கம் செய்தனர்.
ஆனால் பெண் திமிங்கலம், கடலுக்குள் செல்ல முடியாமல் கடந்த 46 நாட்களாக உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறது. திமிங்கலத்தைக் காப்பாற்ற நாகைகலெக்டர் சிவ்தாஸ் மீனா தீவிர முயற்சிகள் மேற் கொண்டார். அரசுக்கு அவர் அனுப்பிய அறிக்கையின் பேரில் கப்பல் படை கப்பல் மூலமாகதிமிங்கலத்தைக் காப்பாற்ற முடிவு செய்யப்பட்டது. இதன்படி, கப்பல் கோடியக்கரை வந்தது. அந்தக் கப்பலால் திமிங்கலம் அருகே செல்ல முடியவில்லை.
இதனால் வேறொரு நீராவி என்ஜின் பொருத்தப்பட்ட படகு மூலம் திமிங்கலத்தைக் கட்டி இழுத்து வந்து, பின்னர் கப்பலில் அதைக் கட்டி இழுத்துச் சென்றுஆழ்கடலில் கொண்டு விடும் பணி செவ்வாய்க்கிழமை நடக்கிறது.
மாவட்ட ஊராட்சி உறுப்பினர் ராஜேந்திரன், நாகை மாவட்ட கடல் மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் சித்திரவேலு மற்றும் அரசு அதிகாரிகள்திமிங்கலத்தை மீட்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். கரையில் ஒதுங்கி உயிருக்குப் போராடி வரும் திமிங்கலத்தை பல ஊர்களில் இருந்து பொதுமக்கள்படகுகளில் வந்து பார்த்து செல்கின்றனர்.












Click it and Unblock the Notifications