இஸ்ரேலைக் கண்டித்து ஹைதராபாத்தில் பேரணி
ஹைதராபாத்:
பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் தாக்குதலைக் கண்டித்து, ஆந்திர மாநிலத் தலைநகர் ஹைதராபாத்தில் 100 க்கும் மேற்பட்ட பள்ளிக் குழந்தைகள்மற்றும் இளைஞர்கள் ஞாயிற்றுக் கிழமை பேரணி நடத்தினர்.
அமெரிக்கா மற்றும் ஐ.நா.சபையை கண்டித்து அவர்கள் கோஷமிட்டனர். இஸ்ரேல் நாட்டு கொடியையும் அவர்கள் எரித்தனர். இந்தப் பேரணிக்கு இந்தியஇஸ்லாமிய மாணவர்கள் அமைப்பு ஏற்பாடு செய்திருந்தது.
பேரணியில் கலந்து கொண்டவர்கள் கூறுகையில், இஸ்ரேல் - பாலஸ்தீனியர்கள் போரில் அமெரிக்கா இரட்டை வேடம் போடுகிறது. இஸ்ரேல் ராணுவதாக்குதலில் தினமும் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த அப்பாவிப் பொதுமக்கள் பலியாகி வருகிறார்கள்.
யூதர்களின் புனித ஸ்தலமான ஜெருசலேத்தைப் பிடிப்பதில் இரு நாட்டினருக்கும் போர் நடந்து வருகிறது. அடிப்படையில் ஜெருசலேம் பாலஸ்தீனத்தின் கட்டுக்குள்இருக்கிறது. இது அவர்களுக்கே சொந்தமாகும். மத்திய அரசு, இஸ்ரேலின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றனர்.
இதுகுறித்து, இந்திய இஸ்லாமிய மாணவர்கள் அமைப்புத் தலைவர் மவுலானா சிராஜூல் ஹாசன் கூறுகையில், இந்தியா எப்போதும் பாலஸ்தீனத்துக்கே தனதுஆதரவை தெரிவித்து வருகிறது.
மேலும் பாலஸ்தீனத்திலுள்ள, இஸ்ரேல் ராணுவ வீரர்கள் உடனடியாக அங்கிருந்து தங்கள் நாடுகளுக்குச் செல்ல வேண்டும் என்பதே இந்தியாவின் விருப்பம்என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications