தேசவிரோத சக்திகளுக்கு கருணாநிதி ஆதரவு: ஜெ.

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தேச விரோத இயக்கங்களுக்கு ஆதரவு தெரிவித்து வரும் திமுக ஆட்சியை கலைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு, அதிமுக பொதுச்செயலாளர்ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து வியாழக்கிழமை ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தில் அரசின் ஆதரவுடன் தான் தேச விரோத இயக்கங்கள் செயல்படுகின்றன என்பதற்கு ராஜ்குமார் கடத்தல் விவகாரம் ஒன்றே சிறந்தசாட்சியாகும்.

தமிழநாடு விடுதலைப் படை இயக்கம், தமிழ் தேசிய படை மற்றும் தமிழ் தேசிய விடுதலை முன்னணி ஆகிய இயக்கங்கள் தமிழகத்தில் அரசின் ஆதரவுடன்செயல்பட்டு வருகின்றன.

இதை மத்திய அரசு உடனடியாகத் தடை செய்ய வேண்டும். அதாவது தமிழகத்தில் ஆளும் திமுக ஆட்சியை உடனடியாகக் கலைக்க வேண்டும்.

தேச விரோத இயக்கங்களுடன் தொடர்புடைய அரசியல்வாதிகளையும், அரசியல் கட்சிகளையும் இனம் கண்டறிந்து அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

தமிழ்நாடு விடுதலை முன்னணிப் படையினர், ஞீச்டூடிண்ணாச்ண.ணிணூஞ் /ணாச்ட்டிடூ என்ற புதிய வெப்சைட்டை ஆரம்பித்துள்ளனர். அதில் கேரளா,மாலத்தீவு, கோலார் தங்கவயல், லட்சத்தீவு போன்ற பகுதிகளை இணைத்து அகன்ற தமிழகம் அமைப்போம் என்றசூளுரைத்துள்ளனர்.

இந்த விஷயங்களில் தமிழக அரசு கண்ணைக் கட்டிவிட்ட நிலையில் செயல்படுகிறது. கருணாநிதி இந்தஇயக்கங்களுக்கு ஆதரவு அளித்த வருகிறார் அதனால் திமுக அரசை உடனடியாக டிஸ்மிஸ் செய்ய வேண்டும்என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் ஜெயலலிதா.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+