நினைத்தது நடக்கவில்லை.. வருந்துகிறார் மூப்பனார்
கோவை:
நாட்டு மக்களின் நன்மைக்காக தனித்துப் போட்டியிட்டோம். பல தியாகங்களைச்செய்தோம். ஆனால், நினைத்தது நடக்கவில்லை. இதை நினைக்கும்போது மனதுக்குவேதனையாகவும், கஷ்டமாகவும் உள்ளது என்றார் மூப்பனார்.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில், நடந்த திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனார் நிருபர்களுக்கு அளித்தபேட்டியில் கூறியதாவது:
புதிய கூட்டணி பற்றி எதுவும் கூற இயலாது. தேர்தல் வரட்டும் பார்க்கலாம். தற்போதுஎந்த அரசியல் கட்சியும் நிலையில்லாமல் ஆளுக்கு ஒரு பக்கம் போய்க்கொண்டுள்ளனர். இந்த நிலை தெளிவடைந்த பின்னர் கூட்டணி பற்றி பார்க்கலாம்.
சென்றமுறையே ஜெயிப்போம் என்று நினைத்துத் தான் தனித்துப் போட்டியிட்டோம்.ஆனால் மக்கள் ஆதரவு இல்லையே? தமிழ்நாட்டில் காமராஜர் ஆட்சி அமையும்என்பது உறுதி. அதற்கான காலம் கூடி வரும். தேவையான முயற்சிகளை மேற்கொண்டுவருகிறோம்.
தமிழகத்தில் த.மா.கா நல்ல வளர்ச்சி பெற்றுள்ளது. தொகுதி வாரியாகச் சென்றுமக்களைச் சந்தித்து வருகிறோம். மதச்சார்பற்ற அணிகள் ஒன்றாக இருக்கிறோம்.தேர்தல் வரும்போது பார்த்துக் கொள்வோம்.
அயோத்தி பிரச்னை குறித்து பிரதமர் கூறிய கருத்துக்கள் தவறுதான், கூட்டணிக்கட்சிகள் கூட அவரது கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். கருணாநிதியும்கூட ஒத்துக் கொள்ளவில்லை. ஆனால் அவர் தைரியமாக தப்பு என்றும்சொல்லவில்லை. பிரதமர் கரு த்தை எப்படி நியாயப்படுத்த டியும்.
பாபர் மசூதி இடிக்கும் போது மத்தியில் காங்கிரஸ் கட்சி ஆட்சியிலிருந்தாலும்,மாநிலத்தில் பா.ஜ ஆட்சி தான் இருந்தது. இதனால் மாநில அரசு மசூதியை இடிக்கமாட்டோம் எனக் கூறியிருந்தது. ஆனால், காங்கிரஸ், பா.ஜ அரசு மீது வைத்திருந்தநம்பிக்கை தவறாகி விட்டது.
வீரப்பன் பிரச்னையில் அரசு வீரப்பனுக்கு சாதகமாக இருந்தது என்பதை விடமெத்தனமாக இருந்தது தான் உண்மை. இப்பிரச்னைக்கு உடனடியாக தீர்வு காணவேண்டும். வீரப்பனுடன் தீவிரவாத அமைப்புகள் இருந்து வருகின்றன. இவர்களைஇப்படியே விட்டு விட்டால் நாட்டுக்கு ஆபத்து.
ஜெயலலிதா பேச்சைக் கேட்டு பிரதமர் கலைக்கவில்லை. எனவே நன்றிக் கடனுக்குதி.மு.க., பாரதிய ஜனதாவுக்கு ஆதரவு கொடுத்தது. ஆனால், அவர்களின் உறவுதொடர்ந்தது. எனவே, தி.மு.க.,வுடன் உறவைமுறித்துக் கொண்டோம்.
பின்னர் நாட்டு மக்களின் நன்மைக்காக தனித்துப் போட்டியிட்டோம். பலதியாகங்களைச் செய்தோம். ஆனால், நினைத்தது நிடக்கவில்லை. இதைநினைக்கும்போது மனதுக்கு வேதனையாகவும் கஷ்டமாகவும் உள்ளது என்றார்மூப்பனார்.
தி.மு.க.,வுடன் கூட்டணி ஏற்பட வாய்ப்பு உள்ளதா என நிருபர்கள் கேட்டபோது,அத்தைக்கு மீசை ளைத்தால் பார்க்கலாம் என்றார். மேலும், தமிழ்நாடு நிலவரம் எப்படிஉள்ளது என்ற கேள்விக்கு சூரிய வெளிச்சம் மிகவும் கடுமையாக இருக்கிறது என்றார்மூப்பனார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications