இந்து ஊர்வலங்களுக்குத் தடை?
வேலூர்:
பொது வீதிகளில் சர்ச், மசூதி இருப்பதை காரணம் காட்டி இந்து ஊர்வலங்கள் தடுக்கப்படுவதாக இந்து முன்னணியின் வேலூர் கோட்ட அமைப்பாளர்வெள்ளையப்பன் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:
இந்துக்களின் ஜனத்தொகை மிகவும் குறைந்துள்ளது. பல தார திருமணத்தினாலும், மதமாற்றத்தாலும் முஸ்லீம், கிறிஸ்தவர்களின் ஜனத்தொகை பெருகிவருகிறது.
பிற்படுத்தப்பட்ட மற்றும் அரிஜனர்களுக்கான சலுகைகள் மாதம் மாறியவர்களுக்கும் அளிக்கப்படுவதன் மூலம் மத மாற்றம்ஊக்குவிக்கப்படுகிறது. மசூதி, கிறிஸ்தவர்களின் சொத்துக்கள் அவர்களிடமே இருக்கிறது. ஆனால் இந்துக்களின் கோயில்கள் அரசிடம் இருக்கிறது.
முஸ்லிம், கிறிஸ்தவர்களுக்கு பிரச்சனை என்றால் அனைத்து கட்சிகளும் உதவிக்கு வருகின்றன.ஆனால் இந்துக்களுக்கு உதவ யாரும் இல்லை.
முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் உதவ பல நாடுகள் தயாராக உள்ளன. ஆனால் இந்துக்களுக்கு இந்தியாவே எதிரியாக இருக்கிறது. பொதுவீதிகளில் சர்ச், மசூதி இருப்பதை காரணம் காட்டி இந்து ஊர்வலங்களுக்கு தடை விதிகக்கப்படுகிறது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலின் முன் இருக்கும் புண்ணிய சக்கர தீர்த்தத்தில் ஆக்கிரமிப்பு இருக்கிறது. அந்த புண்ணிய தீர்த்தம் அசுத்தமாகவும்இருக்கிறது.
பசுக்கள் தினமும் ஆயிரக் கணக்கில் படுகொலை செய்யப்படுகின்றன. அன்று ஜாலியன் வாலாபாக்கில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இன்றுகோவையில் குண்டு வெடிப்பு நடந்துள்ளது. இந்து கடையில் இந்து தயாரிப்பையே கேட்டு வாங்க வேண்டும் என கூறினார் அவர்.