எங்கு பார்த்தாலும் பிரார்த்தனை
அகமதாபாத்:
குஜராத்தில் பூகம்பத்தையடுத்து, அகமதாபாத் நகரிலுள்ள கோவில்கள், மசூதிகள் மற்றும் தேவாலயங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் மாநிலத்தில்சகஜ வாழ்க்கை திரும்புவதற்காக கண்ணீருடன் பிராத்தனை செய்கின்றனர்.
குஜராத் மாநிலத்தில் கடந்த ஜனவரி 26 ம் தேதி ஏற்பட்ட பூகம்பத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்து விட்டனர். இங்கு பூகம்பம் ஏற்பட்ட 17மாவட்டங்களையும் சேர்ந்தவர்கள் மீண்டும், பூகம்பத்தால் பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சத்தில் இருந்து வருகின்றனர்.
கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பூகம்பத்திற்குப்பின் அகமதாபாத்திலுள்ள ஷாகிபாங் காயத்திரி கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கானபொதுமக்கள் வந்து பிராத்தனை செய்த வண்ணம் உள்ளனர்.
இதுவரை கோவில் பக்கமே எட்டிப்பார்க்காத மக்கள் கூட பூகம்பம் ஏற்பட்ட பின் தொடர்ந்து கோவிலுக்கு வந்து பூஜைகள் செய்கின்றனர் என்றுகாயத்திரி கோவில் முதன்மை பூஜாரி ஜோஷி தெரிவித்தார்.
இயற்கைச்சீற்றம், தீமைகள் ஆகியவற்றிலிருந்து விடுபட ஜெயின் மதத்தைச் சேர்ந்த மக்கள் தங்கள் வீடுகளில் விளக்குகள் ஏற்றி பூஜை செய்தவண்ணம் உள்ளனர்.
ஜெயின் மதத்தைச் சேர்ந்த மஜூலாபென் ஷா என்ற குடும்பத் தலைவி கூறுகையில், குஜராத்தில் ஏற்பட்ட பூகம்பம் பூமி மாதாவின் கோபம்தான்.அதற்காக விளக்குகள் வைத்து பூஜைகள் செய்ய வேண்டும். நாங்கள் விளக்குகள் வைத்து பூஜைகள் செய்ய ஆரம்பித்தபின் 4.5 ரிக்டர் அளவுக்கு மேல்நிலநடுக்கம் ஏற்படவேயில்லை. எங்களது வேண்டுதல்களுக்குக் கடவுள் செவி சாய்க்கத் தொடங்கி விட்டார் என்றார் அவர்.
வெள்ளிக்கிழமை ஏற்பட்ட பூகம்பத்துக்குப் பின் வீட்டுக்குள் தூங்க பயப்படும் மக்கள் வெளியேயே தூங்குகிறார்கள். ஜெயின் மற்றும் இந்துகோவில்களில் தொடர்ந்து சிறப்புப் பிரார்த்தனைகள் நடந்த வண்ணம் உள்ளன. மசூதிகளிலும், தேவாலயங்களிலும் தினமும் சிறப்புத் தொழுகைகளும், சிறப்புவழிபாடுகளும் நடந்து வருகின்றன. கோவில் மற்றும் மசூதிகளுக்கு வரும் மக்களுக்கு உணவுப்பொருட்கள் மற்றும் பிரசாதங்களவழங்கப்படுகின்றன.
ஐ.ஏ.என்.எஸ்.
-
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications