234 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும்
திருச்சி:
ஜெயலலிதா மீண்டும் பதவிக்கு வந்தால் அவர் சிறந்த ஆட்சியை தருவார் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனதலைவர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
பா.ம.கவின் மாநில மாநாடு சனிக்கிழமை திருச்சியில் நடந்தது. மாநாட்டில் நிறைவு உரையில் ராமதாஸ்கூறியதாவது:
ஜெயலலிதா மீண்டும் பதவிக்கு வந்தால் மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக பாடுபடுவார். ஜெயலலிதாதலைமையிலான கூட்டணி தமிழகத்தின் அனைத்து 234 சட்டசபை தொகுதிகளிலும் வெற்றி பெறும்.
பா.ம.க. தொண்டர்கள் அனைவரும் அ.தி.மு.க. கூட்டணியின் வெற்றிக்காக உழைக்க வேண்டும்.
ப.சிதம்பரம் ஜெயலலிதாவால் நல்ல ஆட்சி தர முடியாது என கூறியுள்ளார். த.மா.கா. தலைவர் மூப்பனாரும்,த.மா.கா. எம்.எல்.ஏக்களும் தி.மு.க. அரசு மக்களுக்கு எதிரான அரசு என கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய மீனவர்கள் தாக்குதல்:
இலங்கை கடற் படை தொடர்ந்து இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இது குறித்து மத்திய,மாநிலஅரசுகள் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
போலீசாரின் கைகள் கட்டிப் போடப்பட்டிருப்பதால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை சீர் கெட்டுள்ளதுஎன்றார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications