மருமகனுடன் மாமாவின் தேர்தல் பிரசாரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

எனது பணி தொடர்ந்திட உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள் என்று சென்னைசேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடும் திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்தார்.

கருணாநிதி 2-வது கட்டமாக தான் போட்டியிடும் சேப்பாக்கம் தொகுதியில் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தார்.மாலையில், அவர் சென்னைப் பல்கலைக்கழகம் அருகே வேனில் இருந்தபடி வாக்கு சேகரித்தார்.

வாக்கு சேகரிப்பின்போது கருணாநிதி பேசியதாவது:

கடந்த பத்து நாட்களாக தமிழகம் முழுவதிலும் பிரசாரத்தில் ஈடுபட்டபோது, எங்கு பார்த்தாலும் திமுக அலைவீசுவதை புரிந்து கொண்டேன். அந்த சந்தோஷமான செய்தியை உங்களிடம் தெரிவிப்பதில் மகிழ்ச்சிஅடைகிறேன்.

மே 10-ம் தேதி நடக்கவுள்ள தேர்தலில் எனக்கும், திமுக வேட்பாளர்களுக்கும் உதயசூரியன் சின்னத்திலும்,கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு அவர்களது சின்னத்திலும் வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

தேர்தல் ஆணைய விதிப்படிதான் ஜெயலலிதாவின் மனு தள்ளுபடியானது. ஆனால் என் மீதும், ஸ்டாலின் மீதும்பழி போடுகிறார்கள். ஆற்காடு வீராசாமிதான் காரணம், ஆலடி அருணாதான் காரணம் என்று புலம்புகிறார்கள்.

நானா அவர்களிடம் சொன்னேன் தேர்தலில் நிற்க முடியாது என்று. 3 ஆண்டு தண்டனை பெற்றதால், அவரதுவேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. அரசுச் சொத்தான டான்சி நிலத்தை வாங்கியது தப்பு. தப்பு என்று தெரிந்தும்ஏன் வாங்கினீர்கள். முன்னாள் முதல்வரான என்னிடம் வாங்குவதற்கு முன் ஆலோசனை கேட்டிருக்கலாமே?.

அரசு நிலத்தை வாங்குவது சட்டப்படி தப்பும்மா என்று நான் ஆலோசனை கூறியிருப்பேனே? எதிரியாகவேஇருந்தாலும் யோசனை கேட்டால் சொல்ல வேண்டும் அல்லவா?.

காமராஜர் முதல்வராக தேர்வு செய்யப்பட்ட பின் தேர்தலில் நின்று ஜெயித்தார் என்று மூப்பனார் சொல்கிறார்.காமராஜர் ஆட்சியைக் கொண்டு வருவோம் என்று கூறிய மூப்பனார், காமராஜர் படமே இல்லாமல் தேர்தல்அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த மூப்பனார், ஏதோ பேச வேண்டும் என்பதற்காக காமராஜரைஜெயலலிதாவுடன் ஒப்பிட்டுப் பேசி அவரை அவமானப்படுத்த வேண்டாம்.

அதேபோல, அண்ணாவுடன் ஜெயலலிதாவை ஒப்பிட்டுப் பேசியுள்ளார் சங்கரய்யா. அண்ணாவையும்,காமராஜரையும் ஜெயலலிதாவுடன் ஒப்பிட்டுப் பேசாதீர்கள். அதை பொறுத்துக் கொள்ள முடியாது.

சேப்பாக்கம் தொகுதிக்காக நான் பல நல்ல பணிகளைச் செய்துள்ளேன். அந்தப் பணி தொடர உதயசூரியன்சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்யுங்கள் என்றார் கருணாநிதி.

கருணாநிதியின் பிரசாரத்தின்போது, அவரது மருமகனும், மத்திய அமைச்சருமான முரசொலி மாறன், எழும்பூர்வேட்பாளர் பரிதி இளம்வழுதி மற்றும் மாவட்ட திமுக செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

தீவிர அரசியலிலிருந்து விலகுவதாக அறிவித்த முரசொலி மாறன், திடீரென எழும்பூரில் நடந்த தேர்தல்பிரசாரத்தில் கலந்து கொண்டார். கோழைகள் ஒதுங்கியிருக்க மாட்டார்கள் என்றார். இப்போது கருணாநிதியுடன்அவர் தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+