கேரளா சட்டசபைத் தேர்தலில் 3 பேர் சாவு
திருவனந்தபுரம்:
கேரளாவில் வியாழக்கிழமை நடந்த சட்டசபைத் தேர்தலில் 3 பேர் இறந்தனர்.
ஓட்டுப் போடுவதற்காக வரிசையில் நின்று கொண்டிருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு, அவர்கள் 3 பேரும்இறந்ததாகக் கூறப்படுகிறது.
இது தவிர வேறு எந்தவித அசம்பாவிதச் சம்பவங்களும் இன்றி கேரளாவில் அமைதியாகவே தேர்தல் நடந்துமுடிந்தது.
பல வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இல்லாத காரணத்தால் அவர்கள் தங்கள் வாக்குகளைச்செலுத்த முடியாமல் வீட்டுக்குத் திரும்பினர்.
தன்னுடைய வாக்காளர் அடையாள அட்டையையும், கட்சிகளும் வேட்பாளர்களும் கொடுத்த துண்டு அடையாளச்சீட்டையும் காண்பித்த பிறகும் கூட, வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் ஒரு மத்திய அரசு ஊழியர் ஓட்டுப்போட முடியாமல் புலம்பிக் கொண்டிருந்தார்.
ஆனால் அவருடைய மனைவியும் மகளும் தங்களுடைய வாக்குகளை பிரச்சினை இல்லாமல் செலுத்தி விட்டனர்.
முதல் இரண்டு மணி நேரங்களில் 10 முதல் 15 சதவிகிதம் பதிவான வாக்கப்பதிவு, அதற்குப் பின் சூடுபிடிக்கஆரம்பித்தது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications