புலிகள் தாக்குதலுக்கு 4 பேர் பலி
கொழும்பு:
இலங்கை திரிகோணமலை பகுதியில் விடுதலைப்புலிகள் நடத்திய தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் உள்பட 4 பேர்உயிரிழந்தனர். 2 ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.
இதுகுறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் சனத் கருணாரத்னே கூறுகையில், திரிகோணமலையிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோமாரன்காடுவாலா பகுதியில் வெள்ளிக்கிழமை காலை ராணுவ வீரர்கள் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த போது, விடுதலைப்புலிகள் மறைவிடங்களில் இருந்து தாக்குதல் நடத்தினர்.
தொடர்ந்து 15 நிமிடங்கள் நடந்த இந்த தாக்குதலில் ஒரு போலீஸ் கான்ஸ்டபிள், ஒரு பாதுகாவலர் மற்றும்பொதுமக்கள் இரண்டு பேர் உயிரிழந்தனர்.
இந்தத் தாக்குதலில் 2 ராணுவ வீரர்கள் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
முன்னதாக, வியாழக்கிழமை நாகர்கோவில் மற்றும் முகமலை பகுதிகளில் ராணுவ வீரர்கள் நடத்திய தாக்குதலில் 2விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டனர்.
மேலும் கடந்த மாதம் புலிகள் வைத்த கண்ணிவெடியில் சிக்கி 7 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர் என்றார்.
யு.என்.ஐ.