ஜெ. மீதான வழக்கு... ஜூன் 13க்கு ஒத்திவைப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா மீதான வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கின் விசாரணை வருகிற ஜூன்13-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
முதல்வர் ஜெயலலிதா 1993-94ம் ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்யவில்லை என்றும்,வருமானத்திற்கு அதிகமாக அவர் சொத்து சேர்த்துள்ளதாகவும் கூறி வருமான வரித்துறை சார்பில் வழக்குத்தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு சென்னை எழும்பூரில் உள்ள முதலாவது பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.வழக்கு விசாரணை புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது முதல்வர் ஜெயலலிதா சார்பில் மனு தாக்கல்செய்யப்பட்டது. அதில் வழக்கு விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் என்று ஜெயலலிதா கோரிக்கைவிடுத்திருந்தார்.
கோரிக்கையை ஏற்ற நீதிபதி ராமலிங்கம் விசாரணையை ஜூன் 13ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications