ஆசிரியர்கள் டிரான்ஸ்பர்: ஜெ. புதிய நெறிமுறை
சென்னை:
டிரான்ஸ்பர் விஷயத்தில் ஆசிரியர்களுக்கு நிறைய சலுகைகளை அறிவித்துள்ளார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.அரசு பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் வேண்டிய இடத்திற்கு பணி மாற்றம் செய்யப்படவும்,அதில் எந்தவிதமானகுறைபாடும் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து ஜெயலலிதா செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
நிர்வாகப் பணிகளில் எந்த விதமான குறைபாடும், ஒளிவு மறைவின்றியுமின்றி பகிரங்கமாக நடக்க வேண்டும்என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். குறைபாடுகள் சுட்டிக்காட்ப்பட்டால் அவை உடனடியாக தீர்க்கப்படவேண்டும் என அரசு அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்திருக்கிறேன்.
இதன் அடிப்படையில் ஆசிரியர்கள் பணி இடமாற்றம் தகவல்கள் பற்றி உத்தரவு வழங்கியுள்ளேன். ஆசிரியர்கள்பணி மாற்றத்தில் எந்தவிதமான குறையும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியிருக்கிறேன்.
ஆரம்ப, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பணிபுரியும் அனைத்து வகைஆசிரியர்களுக்கான பொது மாறுதல்களின்போது கடைப்பிடிக்கப்பட வேண்டிய நெறிமுறைகளும்வகுக்கப்பட்டுள்ளது.
அவை:
ஒரே பணியிடத்துக்கு ஒருவருக்கு மேல் மாறுதல் கோரிக்கை விடுத்திருந்தால் கீழ்கண்டவாறு முன்னுரிமைஅளிக்கப்படும்.
1) மாநில, மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் கணவன், மனைவி இருவரும்ஓரிடத்தில் பணிபுரிய வேண்டி மாறுதல் கேட்பது. 2) ராணுவத்தில் பணிபுரிவோரின் மனைவி. 3) உடல் ஊனமுற்றஆசிரியர்கள் மற்றும் பார்வையற்ற ஆசிரியர்கள். 4) 50 சதவிகிதத்திற்கு மேல் உடல் ஊனமுற்றவர்கள் என்றமருத்துவ சான்றிதழ் பெற்றவர்கள். 5) ஆசிரியைகள்.
இந்த முன்னுரிமை அடிப்படையில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் மாறுதல் கேட்டிருந்தால். தற்போது பணிபுரியும்இடத்தில் பணிக்காலத்தை அடிப்படையாகக் கொண்டு முன்னுரிமை வழங்கப்படும். மனமொத்த மாறுதல்களும்ஏற்கப்படும்.
மலைப்பகுதிகளில் இருக்கும் பள்ளி ஆசிரியர்களுக்கு தற்போது உள்ள நடைமுறையில் உள்ள மலைச்சுழற்சிமாறுதல் முறையே பின்பற்றப்படும்.
இந்த நெறிமுறைப்படி பணி மாறுதல் வழங்குவதற்காக, அனைத்து கல்வி நிர்வாக அலுவலகங்களில் நிரப்பப்படத்தகுதியான காலியிடங்களில் பெயர் பட்டியல்கள், மற்றும் மாறுதல் நெறிமுறைகள் ஆகியவை தகவல் பலகையில்மக்கள் பார்வைக்கு வைக்கப்படும்.
மாறுதல்கள் வழங்குவதற்கான உத்தரவை அளிக்கக்கூடிய அதிகாரிகள் ஒரு குறிப்பிட்ட நாள், இடம் ஆகியவற்றைஅறிவித்து, மாறுதல் கேட்டுள்ள அனைத்து ஆசிரியர்களையும் அங்கு வரவழைத்து, அவர்கள் முன்னிலையிலேயேவிரும்பிய காலிப் பணியிடங்களுக்கு ஒற்றைச் சாளர முறைப்படி அப்போதே மாறுதல்கள் வழங்குவார்கள்.
நெறிமுறைகள் பின்பற்றப்படாவிட்டாலோ அல்லது குறைபாடுகளிருந்தாலோ அல்லது முன்னுரிமைஅடிப்படையில் மாறுதல் செய்யப்படவில்லை என்ற எண்ணம் தோன்றினாலோ அதை உடனடியாக என்னுடையகவனத்திற்கு கொண்டுவருமாறு ஆசிரியர்களை கேட்டுக் கொள்கிறேன்.
இனி இடைத்தரகர்களை நம்பி ஆசிரியர்கள் ஏமாற வேண்டாம்.இந்த முயற்சிக்கு அனைத்து ஆசிரியர்களும், அரசுஅலுவலர்களும் ஒத்துழைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications