திமுகவின் ஒத்திவைப்புத் தீர்மானம் நிராகரிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றும் 2 மத்திய அமைச்சர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்து, திமுகஉறுப்பினர்கள் இன்று (திங்கள்கிழமை) சட்டசபையில் கொண்டு வரமுயன்ற ஒத்திவைப்புத் தீர்மானத்தைசபாநாயகர் காளிமுத்து நிராகரித்தார்.

கருணாநிதி மற்றும் 2 மத்திய அமைச்சர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்தும், திமுக பேரணியின்போதுஏற்பட்ட வன்முறை குறித்தும் பேசுவதற்கு அனுமதியளிக்க வேண்டும் என்று திமுக உறுப்பினர் துரைமுருகன்கோரினார்.

ஆனால், "இந்த 2 சம்பவங்கள் குறித்தும் தற்போது நீதி விசாரணை நடந்து வருவதால், சட்டசபையில் இதைப் பற்றிப்பேசுவது தவறு. மேலும், விதி எண் 66ன் படி, நீதி விசாரணை நடந்து கொண்டிருக்கும் ஒரு சம்பவம் பற்றிசட்டசபையில் பேசுவதற்கு அனுமதி கிடையாது" என்று காளிமுத்து கூறினார்.

உடனே, சட்டசபை திமுக தலைவர் அன்பழகன், "சட்டசபையின் மரபுக்கு குந்தகம் விளைவிக்காத அளவுக்குஉறுப்பினர்கள் பேசுவதற்கு உரிமை உண்டு. எனவே இந்தச் சம்பவங்கள் பற்றி, தங்கள் கருத்துக்களைப் பேச, திமுகஉறுப்பினர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும்" என்று மீண்டும் வேண்டுகோள் விடுத்தார்.

ஆனால், திமுகவினரின் கோரிக்கையை மறுத்த அன்பழகன், திமுகவினரின் இந்த ஒத்திவைப்புத் தீர்மானத்தைநிராகரித்தார் காளிமுத்து.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+