மொழிக்கு கோவில் அமைத்த தமிழகம்

Subscribe to Oneindia Tamil

Temple Of Tamilமொழியைத் தாயாக மதிப்பவர்கள் தமிழர்கள். மதுரையில் தமிழன்னைக்கு சிலை கூட நிறுவப்பட்டுள்ளது. ஆனால் அந்தத் தமிழ்த் தாய்க்கு ஒரு கோவிலையும்கட்டி தெய்வமாக்கி வழிபட்டு வருகிறார்கள் செட்டி நாட்டுக்காரர்கள்.

செட்டி நாட்டின் மையப்பகுதியில் அமைந்துள்ள காரைக்குடிக்கும், தமிழுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. உலக மகா கவிஞன் கம்பனுக்கு விழா எடுத்த முதல்ஊர் காரைக்குடிதான்.

ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் மக நாள் தொடங்கி, தொடர்ந்து 4 நாட்களுக்கு நடைபெறும் கம்பன் விழாவில் பங்கு பெறாதசொற்பொழிவாளர்களோ, தமிழறிஞர்களோ இல்லை எனும் அளவுக்கு காரைக்குடி கம்பன் விழா சிறப்புடையது.

தமிழ் இலக்கியங்களில் காரைக்குடியின் ஒரு பகுதியான கழனிவாசல் குறிப்பிடப் பெற்றுள்ளது. கழனிவாசல் பகுதியில் ஏழகப்படை செயல்பட்டதாகக்குறிப்புகள் உள்ளன. கழனிவாசல் பகுதியில் உள்ள வைணவத் திருக்கோயில் ஏழகம்பெருமாள் என்று இப்போதும் வழங்கப்படுகிறது.

உலகத்திலேயே முதன் முதலாக மொழியைத் தெய்வமாக்கி, கோவில் அமைக்கும் எண்ணம் காரைக்குடி கம்பன் கழகத்தை நிறுவிய கம்பன் "அடிப்பொடி"சா. கணேசன் அவர்களுக்கு உதித்தது. அதன் பயனாக இன்று தமிழ்த் தாய் கோவில் காரைக்குடியில் தலை நிமிர்ந்து நிற்கிறது.

எங்கே உள்ளது கோவில்?
வழிபாட்டு முறைகள்
தமிழ்த் தாயின் தோற்றம்
வழிபாட்டு முறைகள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+