தமிழ்த் தாயின் தோற்றம்
கருவறையில் தமிழ்த்தாய் நான்கு கைகளுடன் தாமரை பீடத்தில் அமர்ந்தவாறு காட்சியளிக்கிறாள்.
வலது முன் கையில் சுடர் உள்ளது. இடக்கையில் யாழ் உள்ளது. கீழ் வலக்கையில் உத்திராட்ச மாலையும், கீழ்இடக்கையில் சுவடியும் இடம் பெற்றுள்ளன.
சேர, சோழ, பாண்டியர்களான மூவேந்தர்களும் தமிழைப் போற்றி வளர்த்தனர் என்பதை உணர்த்தும் வகையில்,அவர்களின் சின்னங்களான வில், புலி, மீன் ஆகியவை தமிழ்த் தாயின் பின்புறம் உள்ள திருவாச்சியில்பொறிக்கப்பட்டுள்ளன.
நடராஜ மூர்த்திக்குப் பிறகு இம்மூர்த்தியே பல்லாற்றானும் கலை, தத்துவம், விஞ்ஞானம் ஆகிய மூன்றின் கருத்துச்செறிவும் உடையது.
"எங்களைப் போன்ற ஸ்தபதிகளுக்கு இந்த இரு மூர்த்திகளுந்தான் அற்புதப் பொருளாக உள்ளன" என்றுவைத்தியநாத ஸ்தபதி வியந்து குறிப்பிடுகிறார்.
மொழிக்கு கோவில் அமைத்த தமிழகம்
எங்கே உள்ளது கோவில்?
திருக்கோவில் அமைப்பு
வழிபாட்டு முறைகள்












Click it and Unblock the Notifications