தமிழகத்தில் மேல்சபை: திமுக. தீர்மானத்தை ரத்து செய்ய அதிமுக முடிவு
சென்னை:
தமிழகத்தில் மேல் சபையைக் கொண்டு வருவதற்காக திமுக நிறைவேற்றிய தீர்மானத்தை ரத்து செய்யும் விதமானதீர்மானம் தமிழக சட்டசபையில் இன்று (புதன்கிழமை) கொண்டுவரப்படவுள்ளது.
இந்த தீர்மானம் நாடாளுமன்றத்திலும் நிறைவேற்றப்பட்டு மேல்சபை கலைக்கப்பட்டது.
1989ம் ஆண்டு கருணாநிதி முதல்வராக பதவியேற்ற பின் மீண்டும் தமிழகத்தில் மேல்சபையைக்கொண்டுவருவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றினார். அப்போது காங்கிரஸ் மத்தியில் ஆட்சி செலுத்தியகாரணத்தால், தி.மு.க அரசு நிறைவேற்றிய தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேறவில்லை.
1996ம் ஆண்டு தி.மு.க ஆட்சிக்கு வந்த போது மீண்டும் மேல் சபையை கொண்டு வரும தீர்மானம் தமிழகசட்டசபையில் கொண்டு வந்து. 1998ம் ஆண்டு அது தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது
அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்த ஐக்கிய முன்னணிக்கு தேவையான பெரும்பான்மை இல்லாத காரணத்தால்இந்த முறையும் மேல்சபை கொண்டுவரும் தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிறைவேறவில்லை.
இந்நிலையில் மத்தியில் பாரதீய ஜனதா அரசு ஆட்சிக்கு வந்தது. அந்த ஆட்சியில் அ.தி.மு.கவும் அங்கம் வகித்தது,.இதன் காரணமாக தமிழகத்தில் மேல் சபை கொண்டு வரும் தீர்மானம் நாடாளுமன்றத்திற்குகொண்டுவரப்படவில்லை,
அப்போது அ.தி.மு.க. வாஜ்பாய் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை விலக்கிக் கொண்டது. அதன்பின் வந்ததேர்தலில் தி.மு.க - பா.ஜ.க, கூட்டணி ஏற்பட்டு மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்து அந்த ஆட்சிதற்போதும் நடந்து வருகிறது.
நாடாளுமன்றத்தில் எந்த தீர்மானம் நிறைவேற வேண்டுமென்றால் நாடாளுமன்றதின் இரண்டு சபைகளிலும்மூன்றில் இரண்டு பெரும்பான்மை வேண்டும். ஆனால் வாஜ்பாய் அரசுக்கு மத்தியில் போதிய ஆதரவு இல்லாதகாரணத்தால் தமிழகத்தில் மேல் சபை கொண்டு வரும் தீர்மானம் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படவில்லை.
இந்நிலையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. பதவியேற்றது.
மேல்சபை தேவையில்லை என்பது அ.தி.மு.கவின் கருத்து. இதனால் தமிழக சட்டசபையில் மேல் சபையைகொண்டுவர வேண்டும் என்று தி.மு.க.நிறைவேற்றியதை ரத்து செய்ய அ.தி.மு.க. அரசு முடிவெடுத்துள்ளது
இதற்கான தீர்மானம் புதன்கிழமை மாலை தமிழக சட்டசபையில் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்படும். அதன்பின் இந்த தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்.