இந்தியர்கள் என்று சொல்லி ஏமாற்றிய 2 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்
அமெரிக்காவில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்கள் தொடர்பாக, மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்கள் தங்களை இந்தியர்கள் என்று சொல்லி ஏமாற்ற முயன்றது, விசாரணையின்போது தெரிய வந்தது.
டெக்சாஸ் மாநிலம் போர்ட் எர்த் ரயில் நிலையத்தில், அயூப்கான் மற்றும் முகமது ஜாவித் ஆகியோரிடம்விசாரித்தபோது, அவர்கள் தங்களை இந்தியர்கள் என்று கூறிக் கொண்டார்கள்.
அவர்களிடம் சுமார் 10,000 அமெரிக்க டாலர் நோட்டுகள் இருந்தன. மேலும் சில ஆயுதங்களையும் அவர்கள்வைத்திருந்தனர்.
மேலும் துருவித் துருவி விசாரித்ததில், அவர்கள் 2 பேரும் இந்தியர்கள் அல்ல என்று தெரிய வந்தது.விசாரணையைத் திசை திருப்புவதற்காக, அவர்கள் தவறான தகவல் கூறினர் என்பதும் தெரிய வந்தது.
அவர்கள் 2 பேரும் மேலும் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications