அவர்கள் குற்றவாளிகள் அல்ல... பிடிபட்ட 2 இந்தியர்களின் குடும்பங்கள் மறுப்பு
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்:
அமெரிக்காவில் நடந்த தாக்குதல்கள் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட 2 இந்தியர்கள் குற்றவாளிகளே அல்லஎன்று ஹைதராபாத்தில் உள்ள அவர்களுடைய குடும்பங்கள் மறுத்துள்ளன.
"என் மகன் ஒரு அப்பாவி. அவன் கஷ்டப்பட்டு சம்பாதித்து அனுப்பிய பணத்தில்தான் எங்கள் குடும்பமே ஓடுகிறது"என்று கூறினார் அலிகானின் 65 வயது தாய் கல் பேகம்.
மேலும், "அவன் 9 ஆண்டுகளாக ஜாவித்துடன் நியூ ஜெர்சியில் இருந்துள்ளான். அங்கு அவனுடைய வேலை போனபிறகு, வேறு வேலை தேடித்தான் அவன் டெக்சாஸ் செல்லப் போவதாக, சம்பவம் நடப்பதற்கு 2 நாட்களுக்கு முன்தொலைபேசியில் என்னிடம் கூறினான்" என்றும் பேகம் கூறினார்.
ஜாவித்துடைய கர்ப்பிணி மனைவியோ, "அவர் ஒரு அப்பாவி. தன் மேல் சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளிலிருந்துஅவர் நிச்சயம் வெளியேறி வருவார்" என்று நம்பிக்கையுடன் கூறினார்.












Click it and Unblock the Notifications