தனித்துப் போட்டியிடுகிறது காங்கிரஸ்
சென்னை:
உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடும் என்று அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் ரமேஷ் சென்னிதாலா கூறியுள்ளார்.
உள்ளாட்சித் தேர்தல் குறித்த பேச்சு எழுந்தது முதலே காங்கிரஸ் கட்சி அதிமுக கூட்டணியில் நீடிக்குமா என்றசந்தேகம் கிளம்பியது. மாநிலத் தலைவர் இளங்கோவன், காங்கிரஸ் கட்சி யாருடன் கூட்டணி வைக்கும் என்பதுவிரைவில் தெரிய வரும் என்று கூறி வந்தார். மேலும், கூடுதல் இடங்களில் போட்டியிடுவோம் என்றும் அவர்அடிக்கடி கூறி வந்தார்.
இந்த நிலையில், அதிமுக கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தை ஜெயலலிதா கூட்டினார். அக்கூட்டத்தில்கலந்து கொள்ள காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் அவர் அழைப்பு விடுக்கவில்லை. இதையடுத்து தனித்துப்போட்டியிடும் நிலைக்கு காங்கிரஸ் கட்சி தள்ளப்பட்டது. தொடர்ந்து, தனது முதல் கட்ட வேட்பாளர்கள்பட்டியலையும் ஜெயலலிதா வெளியிடவே, காங்கிரஸ் கட்சியை அதிமுக புறக்கணிப்பது தெளிவாகியது.
இந்த நிலையில் அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரமேஷ் சென்னிதாலா கட்சிப் பிரதிநிதியாக சென்னைவந்து காங்கிரஸ் தலைவர்களுடன் பேச்சு நடத்தினார். இரண்டாவது முறையாக ஞாயிற்றுக்கிழமை சென்னை வந்தஅவர் காங்கிரஸ் நிர்வாகிகளுடன் பேச்சு நடத்தினார்.
இந்த பேச்சுக்களின் இறுதியில், திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் ரமேஷ் சென்னிதாலா பேசுகையில், காங்கிரஸ்கட்சி உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடும். வெற்றி வாய்ப்புள்ள அனைத்து உள்ளாட்சி இடங்களிலும்போட்டியிடுவோம்.
எங்களது கருத்துக்களுக்கு ஏற்புடைய, மதச்சார்பின்மை மீது நம்பிக்கைக் கொண்ட கட்சிகளுடன் மாவட்டஅளவில் கூட்டணி அமைத்து காங்கிரஸ் கட்சி போட்டியிடும்.
மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் புதிய கூட்டணியாக காங்கிரஸ் கட்சி செயல்படும் என்றார்.பேட்டியின்போது மாநில காங்கிரஸ் தலைவர் இளங்கோவனும் உடன் இருந்தார்.
அவரிடம், இந்த முடிவு ஏகோபித்த முடிவா என்று கேட்டபோது, நிச்சயமாக இது ஏகோபித்த முடிவுதான். கட்சியின்அனைத்துத் தரப்பினரும் இதற்கு சந்தோஷமாக தங்களது சம்மதத்தைத் தந்தனர் என்றார்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications