எப்படி இருக்கிறார் பன்னீர் செல்வம்?
சென்னை:
முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் இன்னும் பழைய வீட்டிலேயே குடியிருந்து வருகிறார். அவரது வீட்டிற்கு விசேஷ பாதுகாப்பு எதுவும்கொடுக்கப்படவில்லை. இன்னும் ஒரு அமைச்சர் அந்தஸ்திலேயே அவர் உலா வந்து கொண்டிருக்கிறார்.
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பையடுத்து ஜெயலலிதா தனது முதல்வர் பதவியை இழந்தார். இதையடுத்து தனக்கு விசுவாசமானபெரியகுளம் தொகுதி எம்.எல்.ஏ.வும், வருவாய்த்துறை அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வத்தை முதல்ராக்கினார் ஜெயலலிதா.
ஜெயலலிதா முன் கைகட்டி பவ்யமாக நிற்கும் பன்னீர் செல்வம் முதல்வரானது அதிமுகவினரிடையே பெரும் ஆச்சரியத்தைக்கொடுக்கவில்லை. அம்மாவுக்கு முன் சும்மா என்ற நிலையிலான ஒரு நபரே முதல்வர் பதவிக்கு வர வேண்டும் என்று அவர்கள்விரும்பினார்கள். எனவே பன்னீர் செல்வம் முதல்வரானதில் அவர்களுக்கு வருத்தமில்லை.
இந்த நிலையில் இன்னும் ஜெயலலிதாதான் முதல்வராக இருக்கிறாரோ என்று நினைக்கும் அளவுக்கு சென்னையில் நிலை இருந்துவருகிறது. முதல்வர் பன்னீர் செல்வம் ஒப்புக்கு மட்டுமே முதல்வராக இருக்கிறார். அவர் அலுவலகத்தில் அமர்ந்து இருக்கிறாரேதவிர அரசு பைல்கள் அனைத்தும் ஜெயலலிதா அல்லது அவருக்கு நம்பிக்கையான ஐ.ஏ.எஸ்.அதிகாரிகளின் பார்வைக்குப்போன பிறகே பன்னீர் செல்வத்தின் கையெழுத்துக்கு வருகிறது.
மேலும், முதல்வரின் அலுவலகம் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது அவரது வீட்டின் ஒரு பகுதியில் இயங்கி வந்தது. அதுஇன்னும் மாற்றப்படவில்லை. அங்குதான் அரசு செயலாளர்கள், மற்ற அதிகாரிகள் வந்து போய்க் கொண்டுள்ளனர். மேலும்,முதல்வர் பன்னீர் செல்வமும் அங்கு வந்து போகிறார். முக்கிய பைல்களில் கையெழுத்துப் போடுவதற்கு முன்பு ஜெயலலிதாவுக்குபோன் செய்து ஒரு வார்த்தை பன்னீர் செல்வம் கேட்டுக் கொள்வதாகவும் கூறப்படுகிறது.
இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக ஜெயலலிதா குடியிருக்கும் போயஸ் தோட்டத்தின் ஒரு பகுதியிலேயே பன்னீர் செல்வம் குடியேறப்போவதாக தலைமைச் செயலகத்தில் பேச்சு அடிபடுகிறது. இப்போது அமைச்சராக இருந்தபோது குடியிருந்த வீட்டிலேயே பன்னீர்செல்வம் குடியிருந்து வருகிறார். அங்கு ஒரு போன் மட்டுமே இயங்கி வருகிறது. மற்றொரு போன் இயங்கவில்லை என்றுகூறப்படுகிறது.
மற்றபடி பேக்ஸ், ஜெராக்ஸ் இயந்திரங்களும் இல்லை. எனவே கூடிய விரைவில் போயஸ் தோட்டப் பகுதிக்கு பன்னீர் செல்வம்இடம் பெயரலாம் என்று கூறப்படுகிறது.
அதிகாரிகள் மத்தியிலும் முதல்வரைப் பார்ப்பதைக் காடடிலும், ஜெயலலிதாவைப் பார்த்து பேசினால் நடந்து விடும் என்றுதான்பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications