புலிகள் தளபதி கொலை: பதில் தாக்குதலுக்கு தயார்
கொழும்பு:
புலிகள் தளபதி பிரபாகரனுக்கு நெருக்கமானவரும், புலிகளின் விமானப் படைப் பிரிவின் தளபதியாகஇருந்தவருமான சங்கர் கொல்லப்பட்டதையடுத்து, இலங்கை ராணுவத்தினர் மீது புலிகள் பதில் தாக்குதல் நடத்ததிட்டமிட்டுள்ளனர்.
அவர் பிரபாகரனின் உறவினர் என்பதைத் தவிர, விடுதலைப்புலிகளின் பல்வேறு படைப்பிரிவுகளிலும் சிறப்பாகப்பணியாற்றியவர். மேலும் அந்த இயக்கத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவியாக இருந்தவர். இதனால்பிரபாகரனுக்கு அவர் மீது அபார நம்பிக்கையாம்.
இந்நிலைையில் வன்னி என்ற காட்டுப்பகுதியில் சங்கர் மற்றும் சிலர் ஜீப்பில் சென்று கொண்டிருக்கும் போது, ஒருகன்னிவெடி வெடித்ததில் சங்கர் பலியானார். மற்றவர்கள் தப்பிவிட்டனர்.
புலிகள் தரப்பில் இவர் கொலைக்கு காரணம் இலங்கை ராணுவத்தினர்தான் என்று கூறப்படுகிறது. ஆனால்இலங்கை ராணுவத்தினர் இதை திட்டவட்டமாக மறுக்கின்றனர்.
இந்நிலையில் இலங்கை ராணுவத்தின் மீது புலிகள் பதில் தாக்குதலுக்கு தயாராகி வருவதாகக் கூறக்பபடுகிறது.மேலும் புலிகள் ஆட்சி செய்யும் பகுதியில் பிரபாகரன், எமர்ஜென்சியை அறிவித்துள்ளாராம்.
இந்தத் தாக்குதல் நடத்தும் முன்பு இலங்கை ராணுவத்தினரால் புலிகளுக்கு ஏற்படும் ஆபத்துக்களைத் தவிர்க்க.பிரபாகரன் தனது தளபதிகளில் ஒருவரான பால்ராஜ் என்பவரை நியமித்துள்ளார்.
பால்ராஜ் புலிகள் ஆட்சி செய்யும் பகுதியில் இலங்கை ராணுவத்தினர் ஊடுவாமல் தடுக்க நடவடிக்கை எடுத்துவருகிறாராம்.
மேலும் இதற்கு முன்பு கன்னிவெடியில் சிக்கி பலியான புலிகளின் கடற்படைத் துணைத் தளபதி கங்கை அமரன்,அம்பாரா பகுதியின் அரசியல் பிரிவுத் தலைவர் நிஜாம், மற்றும் கிழக்குப் பகுதியின் தொலைத்தொடர்புத் துறைத்தலைவர் மனோ ஆகியோர் கொல்லப்பட்டதற்கும், இலங்கை ராணுவத்தினர் தான் காரணம் என்று புலிகள் தரப்புகூறுகிறது.
தற்போதுள்ள சூழ்நிலையில் இன்னும் ஓரிரு நாட்களில் புலிகள் தரப்பில் பயங்கரமான தாக்குதல் நடத்தப்படுவதுஉறுதியாகி உள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications