நாளை வாஜ்பாய் மாஸ்கோ பயணம்: இந்தியாவுக்கு நவீன ரஷ்ய ஆயுதங்கள்
மாஸ்கோ:
தீவிரவாதிகளை எதிர்த்துப் போராட உதவும் நவீன ஆயுதங்களை இந்தியாவுக்கு வழங்க ரஷ்யா முன் வந்துள்ளது.
ரஷ்ய அரசு ஆயுதத் தயாரிப்பு மையமான ரோசோபோர்னோஎக்ஸ்போர்ட் நிறுவனத்தின் டைரக்டர் ஜெனரல்ஆன்ட்ரெய் பெல்யானினோவ் கூறுகையில்,
தீவிரவாதிகளை எதிர்த்துப் போராட உதவும் எலெக்ட்ரானிக் ஆயுதங்கள், கடலில் தீவிரவாதிகளை எதிர்கொள்ளஉதவும் சிறிய நீர்மூழ்கிகள் உள்ளிட்ட பல ஆயுதங்களை இந்தியாவுக்கு வழங்க தயாராக இருக்கிறோம்.
இந்தியா எங்களுடைய மிக முக்கியமான நட்பு நாடு. இந்தியாவின் விமானப் படை, தரைப்பட, கடற்படைகளுக்குஆயுதங்களை வழங்கி வருகிறோம். தொடர்ந்து வழங்குவோம். எங்களிடம் இந்தியா வாங்கும் ஆயுதங்கள் குறித்துவெளியில் சொல்ல மாட்டோம். வாங்கப்படும் ஆயுதங்கள் குறித்து இரு நாட்டு அதிபர்களுக்கும் ராணுவத்தலைவர்களுக்கும் மட்டுமே தெரியும் என்றார்.
ரஷ்யாவில் அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர்:
இதற்கிடையே அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் டொனால்ட் ரம்ஸ்பீல்ட் நேற்றரவு மாஸ்கோ வந்துசேர்ந்தார். பனிக்காலத்தில் தரைப் படையை முழு அளவில் ஆப்கானிஸ்தானுக்குள் அனுப்ப அமெரிக்கதிட்டமிட்டுள்ளது.
இது குறித்து அவர் ரஷ்ய அதிபருடனும் ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்கெய் இவானொவுடனும் ஆலோசனைநடத்துவார்.
பின்னர் ரம்ஸ்பீல்ட் தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பாகிஸ்தான் சென்றுவிட்டு இந்தியாவுக்கு வருவார்.