இந்தியக் கிரிக்கெட் வாரியம்- ஐ.சி.சி. உடன்பாடு
இஸ்லாமாபாத்:
ரெப்ரீ டென்னசால் 6 இந்திய வீரர்களுக்குத் தண்டனை வழங்கப்பட்ட விவகாரம் குறித்து இந்தியக் கிரிக்கெட்வாரியமும், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலும் பேசி, சுமூக உடன்பாட்டிற்கு வந்தது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட்வாரியம் மகிழ்ச்சியும் திருப்தியும் அடைவதாகத் தெரிவித்துள்ளது.
தென் ஆப்ரிக்கா இந்திய ஆகிய அணிகளுக்கிடையே தென் ஆப்ரிக்காவில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்டின்போது, சச்சின் டெண்டுல்கர், வீரேந்தர் ஷேவாக், கங்குலி உட்பட 6 இந்திய வீரர்களுக்கு மேட்ச் ரெப்ரீ மைக்டென்னஸ் தண்டனை வழங்கினார்.
அதன்படி வீரந்தர் ஷேவாக் இந்தியா ஆடும் முதல் சர்வதேச டெஸ்ட்டில் விளையாடக் கூடாது என்று தண்டனைவிதிக்கப்பட்டிருந்தது. ஆனால் வரும் திங்கள்கிழமை இங்கிலாந்து அணிகளுக்கிடையில் இந்தியாவில்நடைபெறவுள்ள டெஸ்ட்டில் ஷேவாக் இடம்பெறுவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.
ஏற்கனவே தென்ஆப்ரிக்காவில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட்டில் ஷேவாக் இடம்பெறவில்லை. அதனால் இந்தடெஸ்ட்டில் அவர் இடம்பெறுவதில் தப்பில்லை என்று இந்தியத் தரப்பில் வாதம் செய்யப்பட்டது.
ஆனால் தென் ஆப்ரிக்காவில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்டை ஐ.சி.சி. ஒரு சர்வதேச போட்டியாகஅங்கீகரிக்காததால், ஷேவாக் இங்கிலாந்து டெஸ்ட்டில் இடம்பெறுவதை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்கடுமையாக எதிர்த்தது.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து மலேசியாவில் உள்ள ஐ.சி.சி. தலைவர் மால்கம் கிரே மற்றும் தலைமைஅதிகாரி மால்கம் ஸ்பீட் ஆகியோருடன், இந்தியக் கிரிக்கெட் வாரியத் தலைவர் ஜக்மோகன் டால்மியாபேச்சுவார்த்தை நடத்தினார்.
அதன் முடிவில், ஷேவாக் நாளை மறுநாள் மொஹாலியில் துவங்கவுள்ள இங்கிலாந்துக்கு எதிரான முதல்டெஸ்ட்டில் ஆடமாட்டார். இந்திய வீரர்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனை குறித்து மறுபரிசீலனை செய்யப்படும்என்று உடன்பாடடு செய்யப்பட்டது.
இதுகுறித்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் தாரிக் ஜியா கூறுகையில்,
இந்தியக் கிரிக்கெட் வாரியத்திற்கும், ஐ.சி.சி.க்கும் உள்ள பிரச்சனை சுமூகமாகத் தீர்க்கப்பட்டது குறித்து நாங்கள்மகிழ்ச்சியும், திருப்தியும் அடைகிறோம்.
இரு தரப்புகளுக்குமிடையில் இதுவரை நடைபெற்றுவந்த தேவையில்லாத அறிக்கைப் போர் முடிவுக்குவந்ததுகுறித்து, உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மகிழ்ச்சியடைவார்கள். இதுபோன்ற பிரச்சனைஎதிர்காலத்தில் ஏற்படாது என்று நான் நம்புகிறேன்.
இந்திய வீரர்களுக்கு அளிக்கப்பட்ட தண்டனை குறித்து விசாரிக்க ரெப்ரீகள் அடங்கிய கமிஷன் அமைக்கமுடிவெடுத்துள்ள ஐ.சி.சி.யின் முடிவை நான் வரவேற்கிறேன்.
மேலும் ரெப்ரீ இல்லாமல், முழு அதிகாரத்தையும் அம்பயர்களிடம் கொடுக்க வேண்டும் என்று கூறப்படுவதைநாங்கள் எதிர்க்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
-
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக் -
DMK: 3 அமைச்சர்களுக்கு சீட் இல்லை.. ஸ்டாலின் அறிவித்த திமுக வேட்பாளர் பட்டியலில் ஷாக்!












Click it and Unblock the Notifications