நாடாளுமன்றத்தை தகர்க்க திட்டமிட்ட பின் லேடன்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

கடந்த செப்டம்பர் 11ம் தேதி அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தப்பட்டபோதே, நமது நாடாளுமன்றக் கட்டடத்தின்மீதும் தாக்குதல் நடத்த பின் லேடனின் அல்-காய்தா தீவிரவாத இயக்கத்தினர் திட்டமிட்டிருந்தனர் என்று உள்துறைஅமைச்சர் அத்வானி கூறினார்.

இதுகுறித்து இன்று(புதன்கிழமை) டெல்லியில் நிருபர்களிடம் அவர் மேலும் கூறியதாவது:

கடந்த சில நாட்களுக்கு முன் மும்பையில் ஒரு தீவிரவாதி கைது செய்யப்பட்டான். அவனிடம் போலீசார் நடத்தியவிசாரணையில், அவன் ஆஸ்திரேலியாவில் விமானப் பயிற்சி பெற்றுள்ளான் என்பது தெரிய வந்தது.

மேலும் அல்-காய்தா தீவிரவாதிகள் செப்டம்பர் 11ம் தேதியன்றே நமது நாடாளுமன்றக் கட்டடத்தைத் தகர்க்கவும்திட்டம் போட்டுள்ளனர். இதுதவிர, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் தாக்குதல் நடத்தஅல்-காய்தா திட்டமிட்டிருந்ததும் தெரிய வந்துள்ளது.

இதுதவிர மேலும் பல முக்கியத் தகவல்களையும் அவனிடமிருந்து போலீசார் கறந்துள்ளனர். ஆனால்அவற்றையெல்லாம் வெளியில் கூற இயலாது. இன்னும் அவனிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார்அத்வானி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+