For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மே மாதம் மலர்க் கண்காட்சி: ஊட்டி பூங்காவில் ஷூட்டிங்கிற்குத் தடை

By Staff
Google Oneindia Tamil News

ஊட்டி:

ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவில் சினிமா படப்பிடிப்பு நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஊட்டியின் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று மலர்க் கண்காட்சி. மே மாதம் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் மலர்க்கண்காட்சி நடைபெறவுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் தற்போது நடந்து வருகின்றன. மலர்க் கண்காட்சி சமயத்தில்இங்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிக அளவில் இருக்கும்.

மலர்க் கண்காட்சிக்காக பூங்காவை தயார்படுத்த வேண்டியிருப்பதால் மார்ச் 1ம் தேதி முதல் 3 மாதங்களுக்குதாவரவியல் பூங்காவில் சினிமா படப்பிடிப்புகள் நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு மலர்க் கண்காட்சியில் 10,000 மலர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும். கடந்த 3 ஆண்டுகளாகமலர்க் கண்காட்சி பல்வேறு காரணங்களுக்காக நடைபெறவில்லை.

ஆனால் இந்த முறை முதல்வராகப் பதவியேற்கவுள்ள ஜெயலலிதாவை சிறப்பு விருந்தினராக அழைக்கதோட்டக்கலைத்துறை முடிவு செய்துள்ளது. எனவே அதிகபட்ச கவனத்துடன் பூங்காவை அலங்கரிக்க வேண்டும்தோட்டக்கலைத்துறை ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X