For Daily Alerts
Just In
தமாகாவை உடைக்க நினைக்கும் அதிமுக முயற்சி எடுபடாது: வாசன்
கோயம்புத்தூர்:
தமாகாவில் பிளவை ஏற்படுத்த நினைக்கும் அதிமுகவின் முயற்சி வெற்றி பெறாது என்று அக்கட்சியின் தலைவர்ஜி.கே. வாசன் இன்று (சனிக்கிழமை) கூறினார்.
கோயம்புத்தூரில் தமாகாவின் கருத்தாய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட வாசன் பின்னர் நிருபர்களிடம்கூறியதாவது:
தமாகா உள்பட பல கட்சிகளையும் உடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அதிமுக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது.
ஆனால் தமாகாவில் பிளவு ஏற்படுத்த வேண்டும் என்ற அதிமுகவின் நினைப்பு ஒருபோதும் வெற்றி பெறாது.
தமாகாவினர் அனைவருமே கூட்டுக் குடும்பம் போல ஒற்றுமையுடனும் கட்டுக் கோப்புடனும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம்.
அயோத்தி விவகாரம் தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுமாறு பிரதமர் வாஜ்பாய்க்கு அகிலஇந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளதை வரவேற்கிறேன் என்றார் வாசன்.
Comments
Story first published: Saturday, February 23, 2002, 5:30 [IST]