முதுமலை வனப் பகுதியில் பெரும் தீ விபத்து: யானைகள், புலிகள் தப்பியோட்டம்

Subscribe to Oneindia Tamil

முதுமலை:

முதுமலை வனப் பகுதியில் மிகப் பெரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் நூற்றுக்கணக்கான மரங்கள்எரிந்துபோயுள்ளன. வெப்பத்தைத் தாங்க முடியாமல் யானைகளும், புலிகளும் அருகாமை கிராமங்களுக்குத்தப்பியோட ஆரம்பித்துள்ளன.

முதுமலையில் கடும் வறட்சி நிலவி வருகிறது. இங்கு கடும் வெப்பக் காற்றும் வீசி வருகிறது. இதனால் இந்தசரணாலயம் வரும் 1ம் தேதி முதல் மூடப்படுவதாக இருந்தது.

இந் நிலையில் நேற்று திடீரென காட்டுப் பகுதியில் காய்ந்த சருகுகளில் தீப் பிடித்தது. மிக வேகமாக அந்தத் தீமரங்களுக்கும் பரவியது.

வனப் பகுதியில் உள்ள மன்றாடியார் அவென்யூ, கல்லெறி சாலை, தெப்பக்காடை ஆகிய பகுதிகளில் இந்தத் தீபரவ ஆரம்பித்துள்ளது.

இதையடுத்து வனத்துறையினரும் தீயணைப்புப் படையினரும் தீயை அணைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளர்.கடும் காற்றும் வீசி வருவதால் தீ வேகமாக பரவி வருகிறது. எனவே அதை அணைப்பதில் மிகுந்த சிரமம்ஏற்பட்டுள்ளது.

தீ பரவியதையடுத்து அந்தப் பகுதியில் இருந்த யானைகள், புலிகள், மான்கள், மயில்கள், பாம்புகள் ஆகியவைஅங்கிருந்து வெளியேறி அருகாமை கிராமங்களுக்குள் புக ஆரம்பித்துள்ளன. யானைகள் கிராமங்களில்பயிர்களை நாசம் செய்ய ஆரம்பித்துள்ளன.

இத் தீயினால் சிறிய ரக தாவரங்கள் தான் மிகப் பெரிய அளவில் எரிந்து போயுள்ளதாக வனத்துறையினர்தெரிவித்தனர். தீயை அணைக்கும் முயற்சி தீவிரமாக நடந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+