பலத்தைக் காட்ட காத்திருக்கிறோம்: விமானப் படை
புனே:
பாகிஸ்தானிடம் இருந்து வரும் எந்தச் சவாலையும் சந்திக்க இந்திய விமானப் படை தயாராக இருப்பதாக அதன்தலைவர் ஏர் சீப் மார்ஷல் கிருஷ்ணசாமி கூறினார்.
புனேயில் தேசிய பாதுகாப்பு அகாடமியில் பேசிய அவர், இந்தியாவின் முப்படைகளும் தயார் நிலையில் உள்ளன.விமானப் படையைப் பொறுத்தவரை என்ஜின்கள் ஸ்டார்ட் செய்யப்பட்டு தயார் நிலைக்கு வந்துவிட்டோம். கியரைபோட்டுக் கொண்டு புறப்பட வேண்டியது தான் மிச்சம்.
முஷாரப் என்னென்னவோ பேசுகிறார். அவர் அப்படி பேசித் தான் ஆக வேண்டும். அவர் இருக்கும் நிலை அப்படி.தன்னைத் தானே ஜனாதிபதியாக்கிக் கொண்ட அவர் மக்களை குளிர்விக்கும் வகையில் பேசித் தானே ஆகவேண்டும். அவரது பேச்சுக்கும் உண்மை நிலவரத்துக்கும் இடையே பல மைல் தூரம் இருப்பதை அவரே மறுக்கமாட்டார்.
இந்தியா மீது அணு குண்டு போடுவேன் என்கிறார். இந்தியாவை தவிடுபொடியாக்குவேன் என்கிறார். ஒருஅரசியல்வாதியின் பேச்சு இது. அவரால் எதைச் செய்ய முடியும் என்பது அவரை விட நமக்கு நன்றாகத் தெரியும்.
குறைந்த கால அவகாசத்தில் தயாராகும் படை இந்தியப் படை. எதையும் சந்திக்கத் தயாராகக் காத்திருக்கிறோம்.சாத்தானை ஒட்டுமொத்தமாக அழித்துவிடக் காத்திருக்கிறோம்.
நமது பலத்தை, இந்தியாவின் மகத்துவத்தை உலகுக்கு உணர்த்த சந்தர்ப்பத்திற்காகக் காத்திருக்கிறோம்.முப்படைகளும் இதற்கு முன் இப்படி ஒரு தயார் நிலைக்கு வந்ததில்லை. இப்படி இணைந்து செயல்பட்டதும்இல்லை.
வான வேடிக்கை: மார்ஷல் கிண்டல்:
நமது முப்படையின் வீரர்களும் வெவ்வேறு வண்ணங்களில் உடை அணிந்தாலும் உணர்வு ஒன்று தான். இலக்குஒன்று தான். எதிரியை ஒழித்துக் கட்டுவது தான் எங்கள் நோக்கம்.
ஏவுகணைகளை விட்டு நம்மை மிரட்டிவிட பாகிஸ்தான் நினைக்கிறது. அந்த ஏவுகணைச் சோதனைகளை வானவேடிக்கைகளாகத் தான் இந்தியா கருதுகிறது. அவர்களது ஏவுகணை.. அவர்கள் பற்ற வைத்து விண்ணில்விடுகிறார்கள். வேண்டுமானால் கை தட்டி இந்த வான வேடிக்கையை ரசிப்போம்.
அவர்கள் தீபாவளி கொண்டாட நினைத்தால் அதை நாம் ஏன் தடுக்க வேண்டும் என்றார் கிருஷ்ணசாமி.
வாஜ்பாய்- சீன அதிபர் சந்திப்பு:
அடுத்த மாதம் கஜாகிஸ்தானில் நடக்கவுள்ள மாநாட்டின்போது சீன அதிபர் ஜியாங் ஜெமினை பிரதமர் வாஜ்பாய்சந்தித்துப் பேசவுள்ளார். எல்லை நிலவரம் குறித்து இருவரும் விவாதிப்பார்கள் என்று தெரிகிறது.
பாகிஸ்தானின் நெருங்கிய நட்பு நாடு சீனா. ஆனால், இம்முறை எந்த நாட்டுக்கும் ஆதரவான நிலையை எடுக்கப்போவதில்லை என்று சீனா தெளிவுபடுத்திவிட்டது.
உடனே போர் வராது:
இதற்கிடையே இப்போது சிங்கப்பூரில் உள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் உடனடியாகஇந்தியா- பாகிஸ்தான் போர் மூள வாய்ப்பில்லை என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications