திருநள்ளாறு சனீஸ்வரர் ஆலயத்தில் கர்நாடக முதல்வர்
பாண்டிச்சேரி:
காரைக்கால் அருகே உள்ள திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலுக்கு வந்த கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவுக்கு கறுப்புக் கொடி காட்டமுயன்ற 1,000 விவசாயிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முதல்வர் கிருஷ்ணா இன்று காலை பெங்களூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பாண்டிச்சேரி வந்தார். அவரை பாண்டிச்சேரிமுதல்வர் ரங்கசாமி, மாநில காங்கிரஸ் தலைவர் நாராயணசாமி உள்ளிட்டவர்கள் வரவேற்றனர்.
பின்னர் விமான நிலைய வளாகத்தில் கிருஷ்ணாவுக்கு ரங்கசாமி காலை சிற்றுண்டி விருந்தளித்தார். இதன் பின்னர் நிருபர்களிடம்பேசிய கிருஷ்ணா,
காவிரி விவகாரம் இப்போது நீதிமன்ற விசாரணையில் இருப்பதால் அது குறித்து பேச விரும்பவில்லை. அதே நேரத்தில் காவிரிப்படுகையைச் சேர்ந்த தமிழகம், கர்நாடகம், கேரளம், பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களின் கூட்டுக் கூட்டத்தை நடத்தலாம்.
தமிழகத்திற்கும், கர்நாடகத்திற்கும் எப்போதும் போல உறவு நீடிக்கும், அதில் யாருக்கும் சந்தேகம் தேவையில்லை. காவிரிப்பிரச்சினையையொட்டி ஏற்பட்ட பதட்டம் காரணமாக பெங்களூரில் தமிழ் சினிமாக்கள் திரையிடுவதும், தமிழ் சேனல்கள்ஒளிபரப்பும் நிறுத்தப்பட்டுள்ளது. விரைவில் மீண்டும் அவற்றை ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்படும்.
எந்த ஜோசியரும் சொல்லி நான் சனீஸ்வர பகவான் ஆலயத்துக்குச் செல்லவில்லை. நெடுநாட்களாகவே அங்கு செல்ல வேண்டும்என்ற எண்ணத்தில் இருந்தேன். ஆனால், நேரமே கிடைக்கவில்லை. இன்று சனிக்கிழமை பகவானுக்கு உகந்த நாள் என்பதால்அவரை வணங்க வந்துள்ளேன்.
மேலும் மழை வேண்டியும் அமைதி வேண்டியும் அவரிடம் பிரார்த்திப்பேன்.
நாகப்பாவை மீட்க எங்கள் உள்துறை அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள்தமிழக முதல்வரைச் சந்தித்து உதவி கோருவர். ராஜ்குமார் கடத்தலின்போது காட்டுக்குச் செல்ல பல தூதுவர்கள் தயாராகஇருந்தனர். ஆனால், இப்போது யாரும் காட்டுக்குள் செல்ல தயாராக இல்லை என்றார் கிருஷ்ணா.
பின்னர் அவர் கார் மூலம் திருநள்ளாரில் உள்ள சனீஸ்வர பகவான் ஆலயத்துக்குப் புறப்பட்டுச் சென்றார்.
காவிரியில் நீர் தராமல் அரசியல் செய்த கிருஷ்ணாவுக்கு காரைக்கால் அருகே கறுப்புக் கொடி காட்ட அதிமுக, மதிமுக,கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் விவசாயிகள் அமைப்பினர் கருப்புக் கொடிகளுடன் குவிந்தனர். ஆனால், கிருஷ்ணா அங்கு வரும்முன்பாகவே அவர்கள் கைது செய்யப்பட்டு அங்கிருந்து அகற்றப்பட்டுவிட்டனர்.
இதையடுத்து கிருஷ்ணா திருநள்ளாரில் உச்ச காலப் பூஜையில் பங்கேற்று சனீஸ்வர பகவானை தரிசனம் செய்தார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications