For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆவடியில் ராணுவ டாங்க் சுவற்றில் மோதியது: சோதனை அதிகாரி சாவு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை அருகே ஆவடியில் உள்ள ராணுவ டாங்க்கை ஓட்டி சோதனை செய்து பார்த்த ராணுவ அதிகாரி விபத்தில்சிக்கி பலியானார்.

சென்னை அருகே உள்ளஆவடியில் டாங்குகள் தயாரிப்பு தொழிற்சாலை உள்ளது. இங்கு தயாரிக்கப்படும்டாங்க்குகளை ராணுவ அதிகாரிகள் ஓட்டிப் பார்த்து பரிசோதனை செய்வார்கள்.

அது போல புதிதாக தயாரிக்கப்பட்ட டாங்க் ஒன்றை கேதார்நாத் என்ற அதிகாரி ஓட்டிப் பார்த்து சோதனை செய்துகொண்டிருந்தார். ராணுவ வளாகத்துக்குள்ளேயே உள்ள இதற்கான ஓடு பாதையில் சோதனையில் ஈடுபட்டிருந்தார்.

தாழ்வான ஒரு சுரங்கப் பாதை வழியாக அவர் சென்றபோது, எதிரே திடீரென்று ஒரு மாடு குறுக்கிட்டது.இதையடுத்து மாட்டின் மீது மோதி விடாமல் தவிர்க்க டாங்ககை வேறு பக்கம் திருப்பினார். அப்போது டாங்க்சுரங்கப் பாதை சுவற்றின் மீது மோதியது.

இதில் டாங்கியின் ஒரு பகுதி நசுங்கியது. அப் பகுதியில் இருந்த கேதார்நாத்தின் தலையும் நசுங்கியது. அவர் அந்தஇடத்திலேயே இறந்தார்.

ஆவடி தொழிற்சாலைக்குள் யாரும் வர முடியாத அளவுக்கு கடும் பாதுகாப்பு உள்ளது. ஆனால் மாடு எப்படிவந்தது என்று யாருக்கும் தெரியவில்லை.

அருகில் உள்ள ராணுவ பால் பண்ணையில் இருந்து இந்த மாடு வந்திருக்கலாம் என சிலர் கூறுகின்றனர்.

இதுகுறித்து வழக்கப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

-->

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X