சேலம் அரசு மருத்துவமனை அவலம்: மனித உரிமை கமிஷன் விசாரணை ஆரம்பம்
சேலம்:
சேலம் அரசு மருத்துவமனை டாக்டர்களின் அலட்சியத்தால் 8 மாதங்களே நிரம்பிய ஒரு ஆண் குழந்தையின் வலதுகை அழுகிப் போய், துண்டிக்கப்பட்ட சம்பவம் குறித்து தமிழக மனித உரிமை கமிஷன் இன்று தன்விசாரணையைத் தொடங்கியது.
ஹூசேன் என்ற அந்தக் குழந்தைக்குக் கடும் வயிற்றுப் போக்கு ஏற்பட்டதைத் தொடர்ந்து, கடந்த மாதம் சேலம்அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான்.
ஆனால் டாக்டர்களோ வெகு அலட்சியமாக ஹூசேனுக்கச் சிகிச்சை அளித்தனர். என்ன சிகிச்சை அளித்தார்களோதெரியவில்லை, அவனுடைய கை நீல நிறமாக மாறத் தொடங்கியது.
இதையடுத்து ஹூசேனின் வலது கை மிகவும் கோரமாக அழுகத் தொடங்கியது. ஒரு கட்டத்தில் அந்தக் கையைஆபரேஷன் மூலம் துண்டித்து எடுத்தால் தான் அவனுடைய உயிர் பிழைக்கும் என்ற சூழ்நிலை ஏற்பட்டது.
இதையடுத்து அறுவைச் சிகிச்சை மூலம் ஹூசேனின் வலது கையும் துண்டிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின் பேரில் சிறப்பு டாக்டர்கள் குழு ஒன்றுசென்னையிலிருந்து சேலத்திற்கு விரைந்தது. குழந்தையைப் பரிசோதித்துப் பார்த்த அந்தக் குழு, ஹூசேன்நலமுடனே உள்ளதாகவும் உயிருக்கு ஒன்றும் ஆபத்து இல்லை என்றும் கூறி விட்டு சென்று விட்டனர். ஆனால்,அளிக்கப்பட்ட தவறான சிகிச்சை குறித்து மூச்சு விடவில்லை.
இந்நிலையில் டாக்டர்களின் அலட்சியம் காரணமாகத் தான் குழந்தையின் வலது கை துண்டிக்கப்பட வேண்டியசூழ்நிலை ஏற்பட்டது என்று தமிழக மனித உரிமை கமிஷனிடம் புகார் அளிக்கப்பட்டது.
இதையடுத்து மாநில மனித உரிமை கமிஷனைச் சேர்ந்த சம்பந்தம், புருஷோத்தமன் ஆகியோர் இன்று சேலம் அரசுமருத்துவமனைக்குச் சென்று விசாரணை நடத்தினர்.
ஹூசேனுக்குச் சிகிச்சை அளித்த டாக்டர்கள், நர்ஸ்கள், மருத்துவமனை ஊழியர்கள் உள்பட பலரிடமும் விசாரணைநடத்தப்பட்டது. விசாரணை தொடர்ந்து நடைபெறும் என்று தெரிகிறது.
ஹூசேனுக்கு இந்த அவல நிலை ஏற்படுவதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்னர்தான், சேலம் அரசுமருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஒரு கர்ப்பிணி மற்றும் ஒரு சிறுமி ஆகியோர் இறந்தது தொடர்பாக ஒரு டாக்டர்சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
ஆனால் டாக்டர் சங்கங்களின் வேலைநிறுத்த மிரட்டலைத் தொடர்ந்து அந்த சஸ்பெண்ட் உத்தரவையே அரசுதிரும்பப் பெற்றுக் கொண்டு விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-->
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications