ஜெயலலிதாவிடம் மன்னிப்பு கேட்டார் நடிகை லதா: அவதூறு வழக்கு வாபஸ்
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறான செய்தியை வெளியிட்டதற்காக சென்னை 6வது கூடுதல் செஷன்ஸ்நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் நடிகை லதா. இதையடுத்து அவருக்கு எதிராகத்தொடரப்பட்டிருந்த வழக்கை ஜெயலலிதா வாபஸ் பெற்றார்.
பிரபல நடிகையும், முன்னாள் எம்.ஜி.ஆர். அதிமுகவின் துணைப் பொதுச் செயலாளருமான லதா கடந்த 1999ம்ஆண்டு திருவொற்றியூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசுகையில், ஜெயலலிதா டெல்லியில் மெளரியாஷெரட்டன் ஹோட்டலில் தங்கியிருந்தபோது, ஒரு சர்வரை அடித்தார் என்றும் அடுத்தவர்களை அடிப்பது என்பதுஅவருக்கு புதிதான விஷயமல்ல என்றும் கூறியிருந்தார்.
இது அப்போது அனைத்துப் பத்திரிக்கைகளிலும் செய்தியாக வெளிவந்தது.
இதைத் தொடர்ந்து ஜெயலலிதா தரப்பில் சென்னை 6வது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் அவதூறு வழக்குதொடரப்பட்டது. ஜெயலலிதா தனது மனுவில்,
லதா கூறியது முழுக்க முழுக்கப் பொய்யான ஒரு விஷயம். நடக்காத ஒன்றை நடந்ததாக அவர் கூறியிருப்பதுஅரசியல் ரீதியில் திட்டமிட்டு அவதூறு பரப்பும் நோக்கத்துடன் பேசப்பட்டது.
எனவே இதனால் எனது கெளரவத்திற்கு ஏற்பட்ட குந்தகத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு தர லதாவுக்கு உத்தரவிடவேண்டும் என்று அம்மனுவில் ஜெயலலிதா கூறியிருந்தார். ஜெயலலிதா தரப்பு வாதத்தை லதா மறுத்திருந்தார்.
இந்த நிலையில் தனது வக்கீல் குமரகுரு மூலம் தாக்கல் செய்த ஒரு மனுவில் லதா கூறியதாவது:
ஜெயலலிதாவின் புகழைக் குறைக்கும் நோக்கம் எனக்குக் கிடையாது. வாசகர்களைக் கவர்வதற்காகவிளம்பரத்திற்காக பத்திரிக்கைகளில் இதுதொடர்பான செய்திகள் வெளியாகின.
இருந்தாலும் எனது பேச்சு ஜெயலலிதாவின் மனதை புண்படுத்தியிருந்தாலோ, அவருடைய புகழுக்கு பாதிப்புஏற்பட்டிருந்தாலோ அதற்காக நான் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.
எனவே என்னுடைய மன்னிப்பை ஏற்றுக் கொண்டு ஜெயலலிதா தன்னுடைய மனுவை வாபஸ் பெற்றுக்கொள்ளுமாறுகேட்டுக் கொள்கிறேன் என்று தன் மனுவில் லதா கூறியிருந்தார்.
இதையடுத்து லதா மீதான வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்வதாக ஜெயலலிதா மற்றொரு மனுவை நீதிமன்றத்தில்தாக்கல் செய்தார். அம்மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி நைனார் முகம்மது இந்த வழக்கை தள்ளுபடி செய்தார்.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications