வரதட்சணை கேட்டு பெண் எரித்துக் கொலை: கணவன் கைது
பழனி:
பழனியில் வரதட்சணை கேட்டு இளம்பெண் மீது மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொன்ற கணவன் உள்பட 3பேரைப் போலீசார் கைது செய்தனர். மேலும் அந்தப் பெண்ணின் மாமியாரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
பழனியைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவருக்கும் மல்லிகாவுக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் திருமணம்நடந்தது.
திருமணம் நடந்த நாளிலிருந்தே மல்லிகாவை ராமலிங்கத்தின் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டுகொடுமைப்படுத்தி வந்தனர்.
இந்நிலையில் சமீபத்தில் மல்லிகாவிடம் வரதட்சணை கேட்டு தகராறு செய்த ராமலிங்கம், திடீரென்று அவர் மீதுமண்ணெண்ணெயை ஊற்றி நெருப்பையும் பற்ற வைத்தார்.
இதனால் உடல் முழுவதும் தீ பற்றிய நிலையில் மல்லிகா கதறத் தொடங்கினார். அதற்குள் ராமலிங்கம் வீட்டைவிட்டு வெளியே சென்று விட்டார்.
மல்லிகாவின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்து வீடுகளில் உள்ளவர்கள் ஓடி வந்து தீயை அணைத்துமல்லிகாவைக் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆனாலும் அதற்குள் முக்கால்வாசி எரிந்து கருகிப் போன மல்லிகா, போலீசாரிடம் மரண வாக்குமூலம் அளித்தார்.தன் கணவர் மற்றும் அவருடைய குடும்பத்தினர்தான் தன் சாவுக்குக் காரணம் என்று கூறிய பின் மல்லிகாபரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து ராமலிங்கம் உள்பட மூன்று பேரைப் போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாகி விட்டமல்லிகாவின் மாமியாருக்கும் போலீசார் வலை விரித்துள்ளனர்.
-->
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications