சாத்தான்குளத்தில் ஜெ. 6 நாள் பிரச்சாரம்: பிஷப் யோசனைப்படி செயல்பட்ட காங்.
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் தொகுதியில் அதிமுக பொதுச் செயலாளரான ஜெயலலிதா வரும் 17ம் தேதி முதல் 22ம் தேதி வரை 6நாட்கள் சூறாவளித் தேர்தல் பிரசாரம் செய்யவுள்ளார்.
சாத்தான்குளத்தில் வரும் 26ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் 25 வேட்பாளர்கள்களத்தில் உள்ளனர். ஆனாலும் அதிமுக வேட்பாளரான நீலமேகவர்ணம் மற்றும் காங்கிரஸ் வேட்பாளரானவழக்கறிஞர் மகேந்திரன் ஆகிய இருவருக்கும் இடையில்தான் நேரடிப் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் நீலமேகவர்ணத்தை ஆதரித்து ஜெயலலிதா ஆறு நாட்களுக்கு பிரசாரம் செய்யத் திட்டமிட்டுள்ளார்.
இதற்காக வரும் 17ம் தேதி அவர் சாத்தான்குளம் செல்கிறார். அழகப்பபுரம் கிராமத்தில் தொடங்கி அன்று மட்டும்26 கிராமங்களில் ஜெயலலிதா சுற்றுப் பயணம் செய்து வாக்கு சேகரிக்கிறார். அவருடன் நீலமேகவர்ணமும்செல்கிறார்.
மறுநாள் ராஜபத்தி விலக்கு என்ற இடத்தில் பிரசாரத்தைத் தொடங்கி சூறாவளிப் பயணத்தை மேற்கொள்கிறார்ஜெயலலிதா. தொடர்ந்து 19ம் தேதி ஆசிர் விலக்கு என்ற இடத்தில் தொடங்கி சுற்றியுள்ள கிராமங்களில்ஜெயலலிதா ஓட்டு வேட்டை ஆடுவார்.
பின்னர் 20ம் தேதி ஒருநாள் மட்டும் ஓய்வெடுத்துக் கொள்ளும் ஜெயலலிதா, அதற்கு மறுநாள் கண்ணம்பாறைகிராமத்தில் பிரச்சாரம் செய்வார்.
கடைசியாக 22ம் தேதி கால்வாய் கிராமத்தில் பிரசாரத்தைத் தொடங்கி தொகுதி முழுவதும் வாக்கு சேகரிப்பார்.
ஓ. பன்னீர்செல்வம், வளர்மதி, அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 10ம் மேற்பட்ட அமைச்சர்களும்,எம்.பிக்களும், எம்.எல்.ஏக்களும் சாத்தான்குளத்தில் குவிந்துள்ளனர். தெருத்தெருவாக இவர்கள் பிரச்சாரம்மேற்கொண்டுள்ளனர்.
பிஷப்-காங். தலைவர்கள் சந்திப்பு:
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை தொடங்கியது.
இப் பகுதியில் கிருஸ்துவ நாடார் இன மக்களின் எண்ணிக்கை மிக அதிகம் என்பதால் பிஷப் ஜெயபால்டேவிட்டை காங்கிரஸ் தலைவர்களான சோ.பாலகிருஷ்ணன், இளங்கோவன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆதரவுகேட்டனர்.
பாளையம்கோட்டையில் இச் சந்திப்பு நடந்தது. இதையடுத்து காங்கிரசுக்கு ஆதரவளிப்பதாக பிஷப்உறுதியளித்தார்.
இங்கு அதிமுக இந்து வேட்பாளரை அறிவித்ததால் காங்கிரசையும் இந்து வேட்பாளரையே அறிவிக்குமாறு பிஷப்தான் கேட்டுக் கொண்டார் என்ற செய்தியும் உண்டு. காங்கிரஸ் சார்பில் கிருஸ்துவரை நிறுத்தினால் அக் கட்சியைஇந்துக்களுக்கு எதிரானது என்று பிரச்சாரம் செய்ய அதிமுக திட்டமிட்டிருந்தது.
இதையடுத்து கிருஸ்துவ மக்களின் வாக்குகள் எப்படியும் காங்கிரசுக்கு வந்துவிடும் என்பதால் இந்துவேட்பாளரையே அறிவிக்குமாறு காங்கிரசுக்கு பிஷப் தான் யோசனை கூறியதாக அவருக்கு நெருக்கமானவட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் நல்லக்கண்ணுஇன்று காலை தன் பிரசாரத்தைத் தொடங்கினார்.
"கணக்கு காட்ட வேண்டும்":
இதற்கிடையே சாத்தான்குளம் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் 3 நாட்களுக்கு ஒருமுறை தேர்தல் பிரசாரகணக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் தேர்தல் பிரசாரத்தின்போது வேட்பாளருடன் மூன்று கார்கள் மட்டுமே செல்லலாம். நடத்தை விதிகளைமீறும் வேட்பாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.
-->
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications