தேவாரத்துக்கு புதிய பதவி: ஜெயலலிதாவுக்கு கருணாநிதி சூடு
சென்னை:
சாதாரண அரசு அலுவலர்களை பணிக்குறைப்பு என்ற பெயரில் வீட்டுக்கு அனுப்பிக்கொண்டிருக்கும் அதிமுக அரசு அதிரடிப்படை தலைவராக இருந்த தேவாரத்தை நீக்கி விட்டுஅவருக்குப் புதிய பதவி கொடுக்கப்பட்டுள்ளதை திமுக தலைவர் கருணாநிதி விமர்சித்துள்ளார்.
சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அதிரடிப்படையினரில் தலைவரானதேவாரம் சமீபத்தில் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டார். தமிழக விளையாட்டு ஆணையத்தின்துணைத் தலைவராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக இன்று நிருபர்கள் கேட்ட கேள்விக்கு கருணாநிதி பதிலளிக்கையில்,
உடல் நிலை காரணமாக தேவாரத்துக்குப் பணிமாற்றம் தரப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. அப்படிஉடல் நிலை பாதிக்கப்பட்டிருக்கும் அவருக்கு ஓய்வு அளிக்க வேண்டியதுதான் முறை.
தொடர்ந்து பணிகள் கொடுப்பதால் அவருடைய உடல் நிலை மேலும் பாதிப்படையும் என்பதுதான்உண்மை.
இவருக்கு மட்டுமல்ல. அண்மையில் ஓய்வு பெற்ற தமிழக டி.ஜி.பிக்கு (ராஜகோபாலன்) கூடசமீபத்தில் புதிய பதவி அளிக்கப்பட்டுள்ளது.
அரசுப் பணியில் இருக்கும் சாதாரண ஊழியர்களை எல்லாம் பணிக்குறைப்பு என்ற பெயரால்வீட்டுக்கு அனுப்பி வருகிறது இந்த அதிமுக அரசு. ஏனென்றால் இவர்கள் எல்லாம் சாதாரண அரசுஊழியர்கள்தான். ஆனால் அவர்கள் இருவரும் அதிகாரிகள் ஆயிற்றே?
முந்தைய திமுக ஆட்சியில் பள்ளிக் குழந்தைகளுக்கு வாரம் ஒரு முறை வழங்கப்பட்டு வந்தமுட்டையையும், ஏழைப் பெண்கள் திருமணத்திற்கு வழங்கப்பட்டு வந்த ரூ.10 ஆயிரத்தையும்சிக்கனம் கருதி இந்த அதிமுக அரசு நிறுத்தி விட்டது.
ஆனால் இப்போதோ ரூ.1000 கோடி செலவில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதை சிக்கனமானபணியாக அவர்கள் கருதுகிறார்கள் போலும்.
இந்தத் தலைமைச் செயலகத்தைக் கட்டுவதற்காக ராணி மேரி கல்லூரியை இடிப்பதில் தவறில்லைஎன்கிறது தமிழக பா.ஜ.க. தன் வழி தனி வழி என்று அது கூறுகிறதோ? அக்கல்லூரி முதல்வர்விடுப்பில் சென்றாரா? அல்லது கடுப்பில் சென்றாரா? புரியவில்லையே.
கடந்த இரண்டாம் உலகப் போரில் நேச நாடுகளின் சார்பில் வெளியிடப்பட்ட இறந்தவர்களின்கணக்கையும், ஹிட்லர் மற்றும் முசோலினி ஆகியோர் சார்பில் வெளியிடப்பட்ட கணக்கையும்கூட்டிக் கழித்துப் பார்த்தால் போர் முடிந்தபோது உலகில் ஒருவர் கூட மிஞ்சியிருக்க மாட்டார்.
எனவே போர் முனையில் நிற்போர் ஏந்திச் செல்லும் ஆயுதங்களில் முக்கியமான ஆயுதமாகபொய்யும் கருதப்படுகிறது என்றார் கருணாநிதி.
-->
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications