வைகோ: மத்திய அரசின் திருத்தப்பட்ட மனு நீதிமன்றத்தில் ஏற்பு
டெல்லி:
பொடா சட்டத்தின் கீழ் வைகோ கைது செய்யப்பட்டது தவறு என்று கூறி மத்திய பா.ஜ.க. அரசு தாக்கல் செய்த திருத்தப்பட்ட மனுவை இன்றுஉச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.
பொடா சட்டத்தில் உள்ள பேச்சுரிமையை மறுக்கும் 21வது பிரிவை எதிர்த்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வழக்குத்தொடர்ந்துள்ளார். இதில் பதில் மனு தாக்கல் செய்த மத்திய அரசு வைகோ கைது செய்யப்பட்டது சரி தான் என்று கூறியது.
இதற்கு அத்வானி- ஜெயலலிதாவுக்கு இடையிலான ரகசிய அரசியல் உறவு தான் காரணம் என்று வைகோவே குற்றம் சாட்டினார். மத்தியஅரசின் இந்தச் செயலுக்கு திமுக தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து மனுவைத் திருத்திக் கொள்ள உள்துறை அமைச்சகம்முன் வந்தது.
இந்தத் தவறுக்கு ஜூனியர் வழக்கறிஞர்கள் மீது பழியைப் போட்டது மத்திய அரசு. இதையடுத்து வைகோ கைது செய்யப்பட்டது தவறுஎன்று கூறி மத்திய அரசின் வழக்கறிஞர் சோலி சொராப்ஜி புதிய மனுவைத் தாக்கல் செய்தார்.
ஆனால், இரண்டே நாளில் புதிய மனு தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் என்ன? முதலில் ஏன் ஒரு மனுவைத் தாக்கல் செய்தீர்கள்?திடீரென ஏன் நிலையை மாற்றினீர்கள் என உச்ச நீதிமன்றம் விளக்கம் கேட்டது.
இதையடுத்து இன்று விளக்கமான மனுவை சோலி சொராஜி தாக்கல் செய்தார். அதில், மத்திய அரசின் நிலையைத் தவறாகப் புரிந்துகொண்டு முதலில் மனு தாக்கல் செய்யப்பட்டுவிட்டது. வைகோ கைது செய்யப்பட்டதை நியாயப்படுத்தும் அந்த மனுவில் உள்ள 12 மற்றும்13வது பாராக்களை நீக்கிவிடுமாறு அதில் சொராப்ஜி கூறியிருந்தார்.
இதைத் தொடர்ந்து மத்திய அரசின் திருத்தப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொள்வதாக நீதிபதிகள் ராஜேந்திர பாபு, மாத்தூர்ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் அறிவித்தது.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications