2வது நாளாக மருத்துவ மாணவர்கள் போராட்டம்: சிரமத்தில் நோயாளிகள்
சென்னை:
தமிழகத்தில் தனியார் மருத்தவக் கல்லூரிகளைத் தொடங்க அனுமதிக்கக் கூடாது என்பதைவலியுறுத்தி மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகள் இன்று 2வது நாளாகத் தங்கள்போராட்டத்தைத் தொடர்கின்றனர்.
இதனால் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.
தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி அளிக்கக்கூடாது, இந்திய மருத்துவக் கவுன்சில்அங்கீகாரம் பெறாத படிப்புகளுக்கு விரைவில் அங்கீகாரம் பெற்றுத் தர வேண்டும், மருத்துவக்கல்லூரி மாணவர்களுக்கு உதவித்தொகையை அதிகரிக்க வேண்டும், கட்டண உயர்வை வாபஸ்பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 9ம் தேதி இவர்கள் ஒருநாள்அடையாளப் போராட்டம் நடத்தினர்.
ஆனால் இதற்கு மாநில அரசு கடும் மெளனம் சாதித்ததைத் தொடர்ந்து மருத்துவ மாணவ,மாணவிகள் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.வகுப்புக்களைப் புறக்கணித்து அவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கும் 5ம் ஆண்டு எம்.பி.பி.எஸ். மாணவர்களான ஹவுஸ்சர்ஜன்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வேலைகளைப் புறக்கணித்துள்ளனர். இதனால் அரசுமருத்துவமனைகளில் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. சிகிச்சையளிக்க போதிய மருத்துவர்கள்இல்லாமல் நோயாளிகள் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.
இதைச் சமாளிக்க கூடுதல் மருத்துவர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தமிழக அரசுகூறியுள்ளது.
இதே போல பல் மருத்துவக் கல்லூரி மாணவ, மாணவிகளும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று 2வது நாளாக இவர்களுடைய போராட்டம் நீடிக்கிறது.
இந்நிலையில் சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வரும் வெளி நோயாளிகளுக்குமருத்துவமனையின் வெளியில் வைத்தே சிகிச்சை அளிக்கத் திட்டமிட்டுள்ளதாக ஹவுஸ் சர்ஜன்கள்அறிவித்துள்ளனர்.
சென்னையில் உள்ள மருத்துவக் கல்வி இயக்குநரகத்தின் முன்பாக மாணவர்கள் இன்று மாபெரும்ஆர்ப்பாட்டமும் நடத்தினர். அதே போல திருச்சி, தஞ்சாவூரிலும் மனித சங்கிலிப்போராட்டத்தையும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் நடத்தினர்.
கோவை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை மருத்துவக்கல்லூரி மாணவர்கள் வகுப்புக்களைப் புறக்கணித்து பேரணி நடத்தினர்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications