ஜாமீன் கிடைக்காததால் நீதிமன்றத்திலிருந்து தப்பி ஓடிய பெண்
கோபிசெட்டிப்பாளையம்:
செக் மோசடி வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் சரண் அடைந்த பெண் தனக்கு நீதிபதி ஜாமீன்வழங்க மறுத்ததைத் தொடர்ந்து அங்கிருந்து தப்பி ஓடினார்.
கோபிச்செட்டிப்பாளையம் கடை வீதியில் வசித்து வருபவர் சிவகாமி. இவர் முத்துச்சாமி,ராஜரத்தினம் மற்றும் மூர்த்தி ஆகியோரிடமிருந்து ரூ.3 லட்சம் வரை கடன் வாங்கி இருந்தார்.
இந்தக் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்காக அவர் 3 பேரிடமும் "செக்"குகளைக் கொடுத்திருந்தார்.ஆனால் அவருடைய வங்கிக் கணக்கில் பணம் இல்லாததைத் தொடர்ந்து வங்கியிலிருந்து"செக்"குகள் அனைத்தும் அந்த 3 பேருக்கும் திரும்பி விட்டன.
இதைத் தொடர்ந்து முத்துச்சாமி, ராஜரத்தினம் மற்றும் மூர்த்தி ஆகிய 3 பேரும்கோபிச்செட்டிப்பாளையம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இவ்வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு பலமுறை சிவகாமிக்கு சம்மன்அனுப்பப்பட்டது. ஆனால் அவர் தொடர்ந்து ஆஜராகாமல் இருந்து வந்ததால் சிவகாமியைக் கைதுசெய்யுமாறு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
இதையடுத்து தன் வக்கீலுடன் நீதிமன்றத்தில் சரணடைந்தார் சிவகாமி. மேலும் தன்னை ஜாமீனில்விடுதலை செய்யுமாறும் கோரி அவர் மனு தாக்கல் செய்தார். ஆனால் அம்மனுவை நீதிபதிநிராகரித்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சிவகாமி, அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதேநீதிமன்றத்திலிருந்து தப்பி ஓடி விட்டார். இதனால் நீதிமன்றத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சிஅடைந்தனர்.
இதையடுத்து சிவகாமியை உடனடியாகக் கைது செய்யுமாறு போலீசாருக்கு நீதிபதிஉத்தரவிட்டுள்ளார். அவரைப் போலீசார் தேடி வருகின்றனர்.
-->
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications