For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிரதமரின் செயலாளராக தமிழக ஐ.ஏ.எஸ். அதிகாரி நியமனம்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

Narayanan IASபிரதமர் அலுவலத்தின் செயலாளராக தமிழகத்தைச் சேர்ந்த மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான நாராயணன்நியமிக்கப்பட்டுள்ளார்.

நேற்றிரவு இதற்கான உத்தரவை பிரதமர் வாஜ்பாய் பிறப்பித்தார். பொருளாதார நிபுணரான இவர் கேம்ப்ரிட்ஜ்பல்கலைக்கழகத்தில் எம்.பில் பட்டம் பெற்றவர்.

1965ம் ஆண்டில் ஐ.எஸ்.எஸ். தேர்ச்சி பெற்ற இவர் தமிழக கேடர் அதிகாரியாவார். இவர் நெடுங்காலமாக மத்தியஅரசுப் பணியில் இருந்து வருகிறார். இப்போது மத்திய நிதித்துறைச் செயலாளராக இருந்து வரும் நாராயணன்வரும் 30ம் தேதி ஓய்வு பெறுகிறார்.

இதையடுத்து அவர் பிரதமர் அலுவலகத்தின் சிறப்புச் செயலாளராகப் பதவியேற்பார். தமிழகத்தின் வறட்சிநிலையைக் கருத்தில் கொண்டும், தமிழக நிதி நிலையைக் கருத்தில் கொண்டும் மாநிலத்துக்கு அவசர கால நிதியாகரூ. 1,000 கோடியை ஒதுக்கலாம் என கடந்த வாரம் இவர் நிதியமைச்சர் ஜஸ்வந்த் சிங்குக்கு பரிந்துரை செய்தார்என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது மத்திய செலவீனங்கள் துறைச் செயலாளராக இருந்து வரும் டி.சி.குப்தா, அடுத்த நிதித்துறைச்செயலாளராவார் என்று தெரிகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X